செய்திகள் :

தாய்லாந்துடன் ஹிந்து கோயில் பிரச்னை! போர் நிறுத்தம் கோரும் கம்போடியா!

post image

தாய்லாந்து நாடுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர, போர்நிறுத்தத்துக்கு கம்போடியா அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து - கம்போடியா இடையில் நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமையில் இரு நாட்டு எல்லைகளிலும் வெடித்த மோதலால் போர்ப்பதற்றம் நிலவி வருகிறது.

இந்த மோதலால் 30-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்ததால், போர்நிறுத்தம் கோரி கம்போடியா அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் எல்லைகளைப் பகிர்ந்துகொள்கின்றன. இந்த எல்லைப் பகுதியில்தான், தாய்லாந்தின் சுரின் என்ற மாகாணமும், கம்போடியாவின் ஒட்டார் மீஞ்சே என்ற மாகாணமும் அமைந்துள்ளது.

ஆனால், தாய்லாந்து நாட்டின் சுரீன் மாகாணத்தில் உள்ள பிரசாத் தா மோன் தோம் என்ற கோவில், தங்கள் நாட்டுடைய கோவில் என்று கம்போடியா சொந்தம் கொண்டாடுவதே, அண்டை நாடுகளுக்குள் சண்டை வருவதற்குக் காரணமாக உள்ளது.

இந்த கோவில் விவகாரம் அவ்வப்போது சூடுபிடித்து, இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் பதற்றம் தொற்றிக் கொள்ளும். அந்த நிலையில்தான், கம்போடியா படைகள் தாய்லாந்துக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றம்சாட்டி, கம்போடியா மீது ஜெட் விமானங்களைக் கொண்டு வெடிகுண்டுகளை வீசின.

இந்த போர்ப் பதற்றம் குறித்து சர்வதேச நாடுகளும் கவலை தெரிவித்த நிலையில், போர்நிறுத்தத்துக்கு கம்போடியா அழைப்பு விடுத்ததாகத் தெரிகிறது.

போர்ப் பதற்றம் மற்றும் இந்த சண்டை காரணமாக, கம்போடியா -தாய்லாந்து இடையேயான எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இந்த எல்லைத் தாண்டிய தாக்குதல் காரணமாக, இரு நாட்டு எல்லைப் பகுதிகளில் வணிகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள்.

இதனிடையே, கம்போடியாவில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள இந்திய தூதரகம், அவசர உதவி தேவைப்படுமெனில் +855 92881676 என்ற தொலைபேசி எண்ணையோ cons.phnompenh@mea.gov.in. என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

இதையும் படிக்க:டீ விற்றவருக்கு டீ விற்றவர்! பிரிட்டனில் ருசிகரம்!

Cambodia calls for immediate ceasefire with Thailand

நாசாவில் 20 சதவீத பணியாளர்கள் நீக்கப்படும் அபாயம்!

நாசாவில் 20 சதவீத பணியாளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் அரசுப் பணியாளர் ஆள்குறைப்பு நடவடிக்கையின் தாக்கம் நாசாவில் எதிரொலிக்கிறது.ஃபெடரல் பணியாளர்கள் அதாவது அமெரிக்க அரசுப் பண... மேலும் பார்க்க

பிரான்ஸ்: இங்கிலீஷ் கால்வாயைக் கடக்க முயன்ற நபர் பலி !

பிரான்ஸில் இருந்து படகு மூலகமாக இங்கிலீஷ் கால்வாயைக் கடக்க முயன்ற நபர் பலியானார். வடக்கு பிரான்ஸில் உள்ள கடற்கரையிலிருந்து இங்கிலீஷ் கால்வாயைக் கடக்க முயன்ற நபர் பலியானதாக உள்ளூர் அதிகாரிகள் சனிக்கிழம... மேலும் பார்க்க

அமெரிக்காவில் சட்டத்தை மீறினால் ‘விசா’ வாழ்நாள் முழுமைக்கும் ரத்து: புது எச்சரிக்கை!

அமெரிக்காவுக்குச் சென்றுள்ள வெளிநாட்டவர்கள் சட்டத்தை மீறினாலோ அல்லது குற்றச்செயல்களில் ஈடுபட்டாலோ ‘விசா’ வாழ்நாள் முழுமைக்கும் ரத்து செய்யப்படும் என்று புது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

புதைந்தும் உயிருடன் போராட்டம்! இரக்கமில்லா இஸ்ரேல்; கண்ணீருடன் காஸா!

காஸாவில் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழப்போருக்கு உதவி செய்ய முடியவில்லை என்று மீட்புக் குழுவினரும் துயரம் தெரிவிப்பதுதான் பெருந்துயரமாகக் கொள்ளப்படுகிறது.பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப... மேலும் பார்க்க

பலூச். விடுதலைப் படை தாக்குதல்: பாகிஸ்தானின் மூத்த அதிகாரி உள்பட 23 பேர் பலி

பலூசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் ஒரேநேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானின் மூத்த அதிகாரி உள்பட 23 பேர் பலியாகினர். தி பலூசிஸ்தான் போஸ்ட் தெரிவித்திருப்பதாவது, ஜீயாண்ட் பலோச், குழுவின் போராளிகள... மேலும் பார்க்க

திருமணமான டிக்டாக் பிரபலத்தை மணமுடிக்க ஆசைப்பட்ட நபர்கள்: மறுப்பு தெரிவித்ததால் கொலை!

டிக்டாக்கில் பிரபலமான பெண்மணி ஒருவரை சில ஆண்கள் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி, அதனால் ஏற்பட்ட தகராறில் அவருக்கு விஷ மருந்து கொடுத்து கொல்லப்பட்டதாகக் கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... மேலும் பார்க்க