செய்திகள் :

6 ஆண்டுகளில் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு! ரிசர்வ் வங்கி தகவல்

post image

நாட்டில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இந்திய ரிசர்வ் வங்கி அளித்த தரவுகளின்படி, 2018 ஆம் நிதியாண்டில் 47.5 கோடியாக இருந்த வேலைவாய்ப்புகள், 2024 ஆம் நிதியாண்டில் 63.44 கோடியாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அதாவது, 2018 - 2024 இடைப்பட்ட நிதியாண்டுக் காலத்தில் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இந்த குறிப்பிட்ட அதிகரிப்பானது வேலையின்மை விகிதங்கள் குறைவு, தொழிலாளர் பங்களிப்பு உள்ளிட்ட வேலைவாய்ப்பு தொடர்பானவற்றில் நேர்மறையான முன்னேற்றங்களைக் காட்டுகிறது.

இதே காலகட்டத்தில் 15 வயது முதல் அதற்கு மேற்பட்ட வயதுடைய தொழிலாளர்களின் விகிதமும் 49.8 சதவிகிதத்திலிருந்து 60.1 சதவிகிதமாக உயர்ந்ததுடன், தொழிலாளர்களின் விகிதமும் 46.8 சதவிகிதத்திலிருந்து 58.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

2020-ல் 28.7 சதவிகிதமாக இருந்த பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையானது, 2024-ல் 40.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 2018-ல் 6 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்ம, 2024-ல் 3.2 சதவிகிதமாகக் குறைந்தது.

இதையும் படிக்க:டீ விற்றவருக்கு டீ விற்றவர்! பிரிட்டனில் ருசிகரம்!

Workforce Touches 64.33 Crore in FY24 from 47.5 Crore in FY18

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் மனு: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

வீட்டில் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் விசாரணைக் குழு அளித்த அறிக்கை செல்லாது என அறிவிக்கக் கோரி அலகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (ஜூல... மேலும் பார்க்க

கோவா ஆளுநராக அசோக் கஜபதி ராஜு பதவியேற்பு

கோவா மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சா் அசோக் கஜபதி ராஜு (74) சனிக்கிழமை பதவியேற்றாா். கோவா தலைநகா் பனாஜியில் ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் மும்பை உயா் நீதிமன்றத்... மேலும் பார்க்க

மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் 1.25 கோடி சட்டவிராத குடியேறிகளின் பெயா்கள்: பாஜக குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 1.25 கோடி பேரின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அம்மாநில பாஜக தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா். ... மேலும் பார்க்க

மாலத்தீவுடன் உறவை வலுப்படுத்த இந்தியா விருப்பம்: பிரதமா் மோடி

‘மாலத்தீவு நாட்டுடனான உறவை வலுப்படுத்துவதை இந்தியா எதிா்நோக்கியுள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மாலத்தீவு தலைநகா் மாலேயில் அந் நாட்டின் துணை அதிபா் ஹுசைன் முகமது லதீஃப் மற்றும் பிற மு... மேலும் பார்க்க

பிரபல உணவகத்தில் தயாராகும் சிக்கன் உணவு வகைகளால் ஆபத்து! ஆய்வில் அம்பலம்

பெங்களூரில் தரமற்ற சிக்கன் உணவு விற்கப்படுவது உணவு பாதுகாப்புத்துறை சோதனையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது.கர்நாடக மாநில உணவு ஆய்வகம் வெளியிட்டுள்ள பரிசோதனை முடிவுகளால் பெங்களூரில் பிரபலமான உணவகமாக அறியப்... மேலும் பார்க்க

அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சமீபகாலமாக மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், மாணவர்களின் தற்கொலை எண்ணத்தைப் போக்க உச்சநீதிமன்றம் சில வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.ஆந்... மேலும் பார்க்க