செய்திகள் :

தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 7% குறைவு

post image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை நிகழாண்டில் இதுவரை, இயல்பைவிட 7% குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூலை 1 முதல் சனிக்கிழமை (ஜூலை 27) வரை இயல்பாக 108.6 மி.மீ. பெய்ய வேண்டும். ஆனால், நிகழாண்டில் 101.3 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பைவிட 7% குறைவு. எனினும், தமிழகத்தில் மாவட்டம் வாரியாக ஒருசில மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது.

அதன்படி, திருநெல்வேலியில் 164.3 மி.மீ. (339 சதவீதம் அதிகம்), தென்காசியில் 184.5 மி.மீ. (125 சதவீதம் அதிகம்), தேனியில் 144.5 மி.மீ. (96 சதவீதம் அதிகம்), கோவையில் 573.2 மி.மீ. (60 சதவீதம் அதிகம்) மழை பெய்துள்ளது.

இதே காலகட்டத்தில் சென்னையில் இயல்பாக 152.3 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில், நிகழாண்டில் இயல்பைவிட 30 சதவீதம் அதிகமாக 198.4 மி.மீ. மழை பெய்துள்ளது. மிகவும் குறைவாக தூத்துக்குடியில் 0.4 மி.மீ. (97 சதவீதம் குறைவு), கரூரில் 2.2 மி.மீ. (95 சதவீதம் குறைவு), திருச்சியில் 8.7 மி.மீ. (87 சதவீதம் குறைவு) மழை பெய்துள்ளது.

வானிலை நிலவரம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) முதல் ஆக. 1-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.

குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

120 மி.மீ.: தமிழகத்தில் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், சின்னக்கல்லாறு (கோவை) 80 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை:  இதற்கிடையே, ஞாயிறு, திங்கள்கிழமை (ஜூலை 27, 28) தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரிடம் 3 கோரிக்கைகள் வைத்த இபிஎஸ்! என்னென்ன?

தமிழகம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு அளித்தார்.இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமா் நரேந்திர மோடி தூத்துக்குடி நிகழ்வை முடித்துக் க... மேலும் பார்க்க

கோவை, திருச்சியில் பிரம்மாண்ட நூலகங்கள்: பொதுப்பணித் துறை சாதனைகள் குறித்து அரசு விளக்கம்

கோவை, திருச்சியில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட அறிவுசாா் மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்துவைக்க உள்ளாா். பொதுப்பணித் துறை சாா்பில் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்... மேலும் பார்க்க

சட்டவிதிகளின்படி கோயில் கட்டுமானங்களுக்கு நிதி பயன்பாடு: உயா்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை விளக்கம்

கோயில் அறங்காவலா் குழு தீா்மானத்தின்படி, சட்டவிதிகளைப் பின்பற்றியே கோயில் நிலத்தில், கோயில் நிதியைப் பயன்படுத்தி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் ... மேலும் பார்க்க

கட்சி நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது: நிா்வாகிகளுக்கு தவெக கட்டுப்பாடு

தவெக சாா்பில் நடத்தப்படும் கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது, அங்கீகரிக்கப்படாத வாசகங்களை பேனா்களில் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை நிா்வாகிகளுக்கு அந்தக் கட்ச... மேலும் பார்க்க

உதவி மக்கள் தொடா்பு அதிகாரிகளாக திமுகவினரை நியமிக்க முயற்சி: அதிமுக வழக்கு

உதவி மக்கள் தொடா்பு அதிகாரிகளாக திமுகவைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்பப் பிரவினரை நியமிக்க அரசு முயற்சிப்பதாகக் கூறி அதிமுக வழக்குரைஞா் அணி செயலா் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயா்நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது: அமைச்சா் எ.வ.வேலு

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்று தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வடசென்னை வளா்ச்சி திட்டத்தில் சி.எம்.டி.ஏ. மற்றும் நெடுஞ்சாலை... மேலும் பார்க்க