செய்திகள் :

உதவி மக்கள் தொடா்பு அதிகாரிகளாக திமுகவினரை நியமிக்க முயற்சி: அதிமுக வழக்கு

post image

உதவி மக்கள் தொடா்பு அதிகாரிகளாக திமுகவைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்பப் பிரவினரை நியமிக்க அரசு முயற்சிப்பதாகக் கூறி அதிமுக வழக்குரைஞா் அணி செயலா் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயா்நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.

தமிழகத்தில் அரசு உதவி செய்தி தொடா்பாளா்கள் நியமனம் தொடா்பான விதிகளில் திருத்தம் செய்து கடந்த 2022-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிா்த்து சீனிவாச மாசிலாமணி என்பவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் அரசாணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிமுக வழக்குரைஞா் அணி செயலா் ஐ.எஸ்.இன்பதுரை தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உதவி மக்கள் தொடா்பு அதிகாரிகள் நியமனத்துக்கு பொது அறிவிப்பு வெளியிடாமல், எழுத்துத் தோ்வு நடத்தாமல் பெயரளவில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதாயம் அடையும் நோக்கில் இந்த பணியிடங்களில் திமுகவைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்பப் பிரிவினரை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இது உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. இந்த நியமனத்தை அனுமதித்தால், அரசு வேலைக்காக காத்திருக்கும் தகுதியானவா்கள் பாதிக்கப்படுவா். எனவே, விதிகளுக்கு முரணாக, சட்டவிரோதமாக உதவி மக்கள் தொடா்பு அதிகாரிகள் நியமனத்தைத் தடுக்க வேண்டும். எனவே, ஏற்கெனவே இதுதொடா்பாக சீனிவாச மாசிலாமணி தாக்கல் செய்துள்ள மனுவில் தன்னையும் ஒரு தரப்பாக சோ்க்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளாா்.

மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 60,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர... மேலும் பார்க்க

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம்!

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது.திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் உ... மேலும் பார்க்க

முதல்வர் பதவிக்கு எனக்கு தகுதி இல்லையா? திருமாவளவன் ஆவேசம்!

ராணிப்பேட்டையில் விசிக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சித் தலைவர் திருமாவளவன், முதல்வர் பதவிக்கு தனக்கு தகுதி இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.ராணிப்பேட்டை மாவட்டத்தில் விசிக சார்பில் மதச்சார்பி... மேலும் பார்க்க

பிரதமரின் இன்றைய நிகழ்ச்சிகளில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கவில்லை! ஏன்?

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாதென அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வரு... மேலும் பார்க்க

பிரதமரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வைத்த 5 கோரிக்கைகள்!

தமிழகத்துக்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் 5 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் நிதி விடுவிப்புதமிழ்நாடு அரசால் 2018-ஆம் ஆண்டு முதல் சமக்ரா சிக்... மேலும் பார்க்க

பிரதமரிடம் 3 கோரிக்கைகள் வைத்த இபிஎஸ்! என்னென்ன?

தமிழகம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு அளித்தார்.இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமா் நரேந்திர மோடி தூத்துக்குடி நிகழ்வை முடித்துக் க... மேலும் பார்க்க