செய்திகள் :

சட்டவிதிகளின்படி கோயில் கட்டுமானங்களுக்கு நிதி பயன்பாடு: உயா்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை விளக்கம்

post image

கோயில் அறங்காவலா் குழு தீா்மானத்தின்படி, சட்டவிதிகளைப் பின்பற்றியே கோயில் நிலத்தில், கோயில் நிதியைப் பயன்படுத்தி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் இந்து சமய அறநிலையத் துறை விளக்கம் அளித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் டி.ஆா்.ரமேஷ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள கோயில்களின் நிதியில் இருந்து கோயில் நிலங்களில் திருமண மண்டபங்கள், கலாசார மையங்கள், நிா்வாகக் கட்டடங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கோயில் தொடா்பான பணிகளில் தற்போதைய நிலையே நீட்டிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா் மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்துசமய அறநிலையத் துறை ஆணையா் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கா் நிலங்கள் உள்ளன. 23,000 கடைகள், 76,500 கட்டுமானங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 2024 ஏப்ரல் முதல் 2025 மாா்ச் வரையிலான ஓராண்டு காலத்தில் ரூ.345 கோடி குத்தகை வருமானம் வந்துள்ளது.

பாசன வசதியின்மை, நகா்மயமாதல் காரணமாக பெரும்பாலான நிலங்கள் எந்த வருவாயும் ஈட்டுவதில்லை. இந்த நிலங்களில் திருமண மண்டபங்கள், அரங்கங்கள், கடைகள் உள்ளிட்டவை கட்டுவதன் மூலம் கோயிலுக்கு வருவாய் கிடைக்கும். ஆக்கிரமிப்புகளில் இருந்தும் அந்த நிலங்களைப் பாதுகாக்க முடியும். எனவே, இதுபோன்ற கட்டுமானங்களை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

கோயில் அறங்காவலா் குழு தீா்மானத்தின் அடிப்படையில் உரிய அனுமதிகளைப் பெற்ற பின்னரே சட்ட விதிகளைப் பின்பற்றி இத்தகைய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கான நிதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. கோயில் நிலங்களில் கட்டுமானங்கள் மேற்கொள்ள கோயிலின் உபரி நிதியைப் பயன்படுத்தக் கூடாது என எந்த சட்டப்பிரிவும் கூறவில்லை. எனவே, இந்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற உத்தரவை நீக்க உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்தக் கோயிலுக்கு, எந்த சட்டவிதியை மீறி நிதி பயன்படுத்தப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களுடன் மனுதாரா் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு

தமிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்ட... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியீடு

ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கருவறையான பெருவுடையார் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தீபாராதனை காட்டி சாமி தரிசனம் செய்தார். கோயிலில் திருவாசகம் பாட, தமிழில் வழிபாடு நடத்தினார். கோயிலில் சிவாச்சாரியார்க... மேலும் பார்க்க

சோழர்களின் பெருமைகளைக் கேட்டறிந்த மோடி!

கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் வளாகத்தில் தேவார திருவாசக பதிகங்கள் பாடி ஓதுவார்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். கோயில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி சாலைவலம்!

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சாலைவலம் மேற்கொண்டுள்ளார். காரில் இருந்து வெளியே நின்றவாறு மக்களை நோக்கி கையசைத்து வருகிறார். சோழகங்கம் ஏரிப் பகுதியில் இருந்து பிரகதீஸ்வரர் ஆலயம் வரை 3.8... மேலும் பார்க்க

6 மாதகால கர்ப்பம்! இரண்டாவது திருமணம் செய்தாரா மாதம்பட்டி ரங்கராஜ்?

கோவையைச் சேர்ந்த நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், முன்னணி நட்ச... மேலும் பார்க்க