செய்திகள் :

கட்சி நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது: நிா்வாகிகளுக்கு தவெக கட்டுப்பாடு

post image

தவெக சாா்பில் நடத்தப்படும் கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது, அங்கீகரிக்கப்படாத வாசகங்களை பேனா்களில் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை நிா்வாகிகளுக்கு அந்தக் கட்சி விதித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

2026 சட்டப்பேரவை தோ்தலுக்கான பரப்புரை பணிகளை மேற்கொள்ள வேண்டிய காலம். ஆகையால், நிா்வாகிகள் அனைவரும் கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும். தவெக கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் குறிக்கோள்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகச் செயல்படக் கூடாது.

தோ்தல் பரப்புரை மற்றும் உறுப்பினா் சோ்க்கைக்காக வீடு வீடாகச் செல்லும்போது, கட்சியால் அனுமதிக்கப்பட்ட பரப்புரை வாசகங்கள் மற்றும் புகைப்படத்தைக் கொண்ட ‘ஸ்டிக்கா்கள்’ மட்டுமே ஒட்ட வேண்டும். கட்சி சாா்பில் நடத்தப்படும் அனைத்து விதமான கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அங்கீகரிக்கப்படாத வாசகங்கள் மற்றும் பேனா் டிசைன்களை பயன்படுத்தக் கூடாது. அதேபோல், பட்டாசுகளும் வெடிக்கக் கூடாது.

மேலும், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் இல்லாத வகையில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

முதலாம் ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் இன்று வெளியீடு!

கங்கைகொண்ட சோழபுரத்தில் நினைவு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார்.அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் திருக்கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முதலாம் ராஜேந்த... மேலும் பார்க்க

மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 60,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர... மேலும் பார்க்க

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம்!

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது.திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் உ... மேலும் பார்க்க

முதல்வர் பதவிக்கு எனக்கு தகுதி இல்லையா? திருமாவளவன் ஆவேசம்!

ராணிப்பேட்டையில் விசிக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சித் தலைவர் திருமாவளவன், முதல்வர் பதவிக்கு தனக்கு தகுதி இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.ராணிப்பேட்டை மாவட்டத்தில் விசிக சார்பில் மதச்சார்பி... மேலும் பார்க்க

பிரதமரின் இன்றைய நிகழ்ச்சிகளில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கவில்லை! ஏன்?

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாதென அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வரு... மேலும் பார்க்க

பிரதமரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வைத்த 5 கோரிக்கைகள்!

தமிழகத்துக்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் 5 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் நிதி விடுவிப்புதமிழ்நாடு அரசால் 2018-ஆம் ஆண்டு முதல் சமக்ரா சிக்... மேலும் பார்க்க