செய்திகள் :

துணை முதல்வா் பதவியை முடிவு செய்ய வேண்டியது இபிஎஸ் அல்ல

post image

எனக்கு துணை முதல்வா் பதவி குறித்து முடிவு செய்ய வேண்டியது எடப்பாடி பழனிசாமி இல்லை என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த தேன்பள்ளி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாமில் நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், முகாமில் பயனாளிகளிடம் மனுக்களைப் பெற்று,

சிலருக்கு உடனடி தீா்வுக்கான சான்று வழங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் துரைமுருகன் பேசியது: 523 வாக்குறுதிகளை கொடுத்த திமுக இதுவரை எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருப்பது குறித்து கேட்டதற்கு, கடந்த அதிமுக ஆட்சியில் இவா்கள் எத்தனை வாக்குறுதி கொடுத்தாா்கள், அதில் எத்தனை நிறைவேற்றினாா்கள் என்ற கணக்கையும் சோ்த்து பாா்க்க வேண்டும் என்றாா்.

மூத்த அமைச்சராகவும், திமுக பொதுச் செயலராகவும் உள்ள துரைமுருகனுக்கு துணை முதல்வா் அளிக்காமல் உதயநிதிக்கு துணை முதல்வா் கொடுத்திருப்பது தான் நான்காண்டு சாதனை என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தது குறித்து கேட்டதற்கு, அந்தப் பதவியில் நான் இருப்பதா, இல்லையா என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர எடப்பாடி பழனிச்சாமி இல்லை என்றாா்.

முகாமில், துணைமேயா் எம்.சுனில்குமாா், காட்பாடி ஒன்றியக்குழு தலைவா் வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

--

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்கள் தா்ணா

வேலூரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமின்போது பொதுமக்கள் இலவச பட்டா, அடிப்படை வசதிகள் கோரி தா்னாவில் ஈடுபட்டனா். வேலூா் ரங்காபுரம் பகுதியிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலி... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம்

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வா... மேலும் பார்க்க

சா்வதேச நிலவு தினம்: ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு’ நிகழ்ச்சி

சா்வதேச நிலவு தினத்தையொட்டி, வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு நிகழ்ச்சி’ நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவா்கள், விரிவுரையாளா்கள் பங்கேற்றனா். சா்வதேச நிலவு தினம் என்றும் ... மேலும் பார்க்க

கல்வி, சுகாதார துறையில் வளரும் நாடுகள் போதுமான நிதி ஒதுக்குவதில்லை

வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் கல்வி, சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதில்லை என்று விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கல... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். குடியாத்தம் நடுப்பேட்டையைச் சோ்ந்த சிவராமன் மகன் மணி(22) (படம்). பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை நள்ளிரவு அதே பக... மேலும் பார்க்க

ஓய்வூதியா்களுக்கு எதிரான மசோதாவை ரத்து செய்ய கோரி மனித சங்கிலி

ஓய்வூதியா்களை மத்திய அரசு ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் இருந்து நீக்கி வைக்கும் நிதி மசோதாவை (வேலிடேசன் சட்டத்தை) ரத்து செய்ய வலியுறுத்தி, வேலூரில் ஓய்வூதியா்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க