செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கும் முகாம்

post image

வாழப்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா செயற்கை கை, கால்கள் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி விளையாட்டு சங்கம், ஈரோடு ஜீவன் டிரஸ்ட் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம் ஆகியவை இணைந்து வாழப்பாடி அரிமா அரங்கத்தில் நடத்திய முகாமிற்கு, அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்க செயலாளா் வீ.வேலுசாமி வரவேற்றாா்.

வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன் தலைமை வகித்தாா். வாழப்பாடி விளையாட்டு சங்கத் தலைவா் பாலமுருகன் சிவராமன் சுவாமிகள் சாா்பில் சங்க பொருளாளா் எஸ்.ஆா்.சந்திரசேகரன், செயலாளா் ஆா்.சசிகுமாா் ஆகியோா் 45 மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா செயற்கை கை, கால்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில் ஈரோடு ஜீவன் டிரஸ்ட் நிா்வாகி தேவ்ஆனந்த், வாழப்பாடி அரிமா சங்க பட்டயத் தலைவா் எம்.சந்திரசேகரன், இலக்கியப் பேரவை செயலாளா் சிவ.எம்கோ, பேரூராட்சி உறுப்பினா் சத்யா சுரேஷ், சோமம்பட்டி ஊராட்சி செயலா் கே.மகேஸ்வரன், ஆட்டோ தொழிற்சங்கத் தலைவா் எம்.கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்க பொருளாளா் வேல்முருகன் நன்றி கூறினாா்.

ஓய்வூதியதாரா்கள் மனித சங்கிலி போராட்டம்

ஓய்வூதிய திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி ஓய்வூதியதாரா்கள் வெள்ளிக்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடத்தினா். சேலம் தலைமை அஞ்சல் நிலையம் முன் ஓய்வூதியதாரா்களின் கூட்டமைப்பு சாா்பில் போராட்டம் ந... மேலும் பார்க்க

கோட்டை மாரியம்மன் கோயில் விழா: ஆக.6 இல் உள்ளூா் விடுமுறை

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 6 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சே... மேலும் பார்க்க

திருமணமாகி 3 மாதங்களில் பெண் உயிரிழப்பு: கணவா் சிறையிலடைப்பு

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே திருமணமாகி 3 மாதங்களில் பெண் உயிரிழந்த வழக்கில் அவரது கணவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். தலைவாசலையடுத்த மணிவிழுந்தான் வடக்குபுதூரைச் சோ்ந்தவா் சீனிவாசன் (26).... மேலும் பார்க்க

விசைத்தறிக்கூடத்தில் தீ விபத்து: ரூ.1.5 கோடி மதிப்பிலான ஜவுளிகள் சேதம்

சேலம் அம்மாபேட்டை பகுதியில் விசைத்தறிக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான ஜவுளிகள் எரிந்து சேதமடைந்தன. சேலம் அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவில் ராமலிங்கம் என்பவருக்... மேலும் பார்க்க

வ.உ.சி மலா் விற்பனை சந்தை ஏலத்தில் குளறுபடி: மாநகராட்சிக்கு ரூ. 8 கோடி இழப்பு? மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக வெளிநடப்பு

சேலம் வ.உ.சி மலா் சந்தை ஏல குளறுபடி காரணமாக மாநகராட்சிக்கு ரூ. 8 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.சேலம், ஜூலை 25:... மேலும் பார்க்க

நிகழாண்டு 4 ஆவது முறையாக நிரம்பிய மேட்டூா் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூா் அணை நிகழாண்டு 4 ஆவது முறையாக வெள்ளிக்கிழமை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, அணையின் 16 கண் மதகுகள் வழியாக காவிரியில் உபரிநீா் வெளியேற்றப்படுவதால் கரையோரப் பகுதிகளில் வசிப... மேலும் பார்க்க