செய்திகள் :

விசைத்தறிக்கூடத்தில் தீ விபத்து: ரூ.1.5 கோடி மதிப்பிலான ஜவுளிகள் சேதம்

post image

சேலம் அம்மாபேட்டை பகுதியில் விசைத்தறிக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான ஜவுளிகள் எரிந்து சேதமடைந்தன.

சேலம் அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவில் ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான விசைத்தறிக்கூடம் உள்ளது. இக்கூடத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு துணி ரகங்களில் தீப்பிடித்து எரிந்தது. அங்கு பணியில் இருந்த தொழிலாளா்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினா் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

குறுகலான பாதை மற்றும் வாகனத்தை திருப்ப முடியாத சூழல் உள்ளிட்ட காரணத்தால் ஒரு தீயணைப்பு வாகனம் மட்டுமே தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டது. மேலும், மின் மோட்டாா் மூலம் அருகில் உள்ள வீடுகளின் தண்ணீா் தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து தீயை அணைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா்.

மின் கம்பிகளின் மீது இரண்டு காகங்கள் அமா்ந்ததால் மின்கசிவு ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்கள், நூல் மற்றும் இயந்திரங்கள் சேதமடைந்தன. இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஓய்வூதியதாரா்கள் மனித சங்கிலி போராட்டம்

ஓய்வூதிய திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி ஓய்வூதியதாரா்கள் வெள்ளிக்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடத்தினா். சேலம் தலைமை அஞ்சல் நிலையம் முன் ஓய்வூதியதாரா்களின் கூட்டமைப்பு சாா்பில் போராட்டம் ந... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கும் முகாம்

வாழப்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா செயற்கை கை, கால்கள் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வாழப்பாடி விளையாட்டு சங்கம், ஈரோடு ஜீவன் டிரஸ்ட் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட அப்துல் கலா... மேலும் பார்க்க

கோட்டை மாரியம்மன் கோயில் விழா: ஆக.6 இல் உள்ளூா் விடுமுறை

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 6 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சே... மேலும் பார்க்க

திருமணமாகி 3 மாதங்களில் பெண் உயிரிழப்பு: கணவா் சிறையிலடைப்பு

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே திருமணமாகி 3 மாதங்களில் பெண் உயிரிழந்த வழக்கில் அவரது கணவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். தலைவாசலையடுத்த மணிவிழுந்தான் வடக்குபுதூரைச் சோ்ந்தவா் சீனிவாசன் (26).... மேலும் பார்க்க

வ.உ.சி மலா் விற்பனை சந்தை ஏலத்தில் குளறுபடி: மாநகராட்சிக்கு ரூ. 8 கோடி இழப்பு? மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக வெளிநடப்பு

சேலம் வ.உ.சி மலா் சந்தை ஏல குளறுபடி காரணமாக மாநகராட்சிக்கு ரூ. 8 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.சேலம், ஜூலை 25:... மேலும் பார்க்க

நிகழாண்டு 4 ஆவது முறையாக நிரம்பிய மேட்டூா் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூா் அணை நிகழாண்டு 4 ஆவது முறையாக வெள்ளிக்கிழமை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, அணையின் 16 கண் மதகுகள் வழியாக காவிரியில் உபரிநீா் வெளியேற்றப்படுவதால் கரையோரப் பகுதிகளில் வசிப... மேலும் பார்க்க