செய்திகள் :

குஜராத் மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!

post image

குஜராத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று கலந்துரையாடினார்.

காங்கிரஸ் தொண்டர்களுக்கும், மாவட்ட பிரிவுகளின் தலைவர்களுக்கும் மூன்று நாள் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக ஒருநாள் பயணமாகக் குஜராத் வந்துள்ள ராகுல் இன்று காலை வதோதரா விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அங்கிருந்து ஆனந்த் என்ற இடத்திற்கு அழைத்துவரப்பட்டார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

சங்கதன் சுஜன் அபியான்(கட்சி அமைப்பை வலுப்படுத்தும் பிரசாரம்) கீழ் மாவட்டத் தலைவர்களின் பயிற்சி முகாமில் உரையாற்றினார்.

2027 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, குஜராத் காங்கிரஸ், ஆனந்த் நகருக்கு அருகிலுள்ள ஒரு உணவகத்தில் மாவட்ட காங்கிரஸ் குழுக்களின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர்களுக்கான முகாம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாம் ஜூலை 28ஆம் தேதி நிறைவடைகின்றது.

2027 தேர்தலுக்கான திட்ட வரைபடத்தைத் தயாரிப்பதே இந்த முகாமின் முக்கிய நோக்கம் என்று கட்சி முன்பு கூறியிருந்தது.

பிற்பகல் 3 மணியளவில், பல்வேறு கூட்டுறவு பால் சங்கங்கள், பால் பண்ணைகளில் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவுத் துறைத் தலைவர்கள் மற்றும் பால் பண்ணை விவசாயிகளுடன் காந்தி கலந்துரையாட உள்ளார்.

பிரபல உணவகத்தில் தயாராகும் சிக்கன் உணவு வகைகளால் ஆபத்து! ஆய்வில் அம்பலம்

பெங்களூரில் தரமற்ற சிக்கன் உணவு விற்கப்படுவது உணவு பாதுகாப்புத்துறை சோதனையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது.கர்நாடக மாநில உணவு ஆய்வகம் வெளியிட்டுள்ள பரிசோதனை முடிவுகளால் பெங்களூரில் பிரபலமான உணவகமாக அறியப்... மேலும் பார்க்க

அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சமீபகாலமாக மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், மாணவர்களின் தற்கொலை எண்ணத்தைப் போக்க உச்சநீதிமன்றம் சில வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.ஆந்... மேலும் பார்க்க

அவசர ஊர்தியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை! எதிர்க்கட்சிகள் கண்டனம்

பிகார் மாநிலத்தில் அவசர ஊர்தியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு பெண் ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உடற்தகுதித் தேர்வுக்குச் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிக... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்ட 17 எம்.பி.க்களுக்கு விருது!

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது 2025 வழங்கி கௌரவிக்கப்படவிருக்கிறது.சன்சத் ரத்னா விருது 2025-க்கு தேர்வானவர்கள்: சுப்ரியா சுலேரவி கிஷன்நிஷிகாந்த் து... மேலும் பார்க்க

அவைத் தலைவரிடம் முதல் கோரிக்கை வைத்து திட்டு வாங்கியதைப் பகிர்ந்த கிரண் ரிஜிஜு

புது தில்லி: நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தான் முதன் முதலில், அவைத் தலைவரை சந்தித்தபோது வைத்தக் கோரிக்கையும் அதனால் அவரிடம் திட்டு வாங்கியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.தான் அரசியலில் ... மேலும் பார்க்க

மன அழுத்தத்தை ஏற்படுத்திய கல்லூரி நிர்வாகம்: உதய்பூரில் பல் மருத்துவ மாணவி தற்கொலை!

உதய்பூர் அருகேயுள்ள டெபாரியில் பல் மருத்துவம் பயிலும் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை காவலரின் ஒரே மகள் ஸ்வேதா சிங்(25). இவர் ... மேலும் பார்க்க