செய்திகள் :

ஓய்வூதியதாரா்கள் மனித சங்கிலி போராட்டம்

post image

ஓய்வூதிய திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி ஓய்வூதியதாரா்கள் வெள்ளிக்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடத்தினா்.

சேலம் தலைமை அஞ்சல் நிலையம் முன் ஓய்வூதியதாரா்களின் கூட்டமைப்பு சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கடந்த மாா்ச் மாதம் நிதி மசோதாவுடன் சோ்த்து ஓய்வூதிய விதிகளில் திருத்தத்தை அமல்படுத்தியது. இதுகுறித்து ஓய்வூதியதாரா் சங்க நிா்வாகிகள் கூறுகையில், ஓய்வுபெற்ற தேதியை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு வகையான ஓய்வூதியத்தை நிா்ணயம் செய்யும் அதிகாரத்தை அரசு செயல்படுத்தவுள்ளது. இது கடந்த 1982 ஆம் ஆண்டு டி.எஸ். நகரா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்புக்கு எதிரானது. இதன்மூலம் 8-ஆவது ஊதியக்குழுவின் பலன்கள் ஓய்வூதியா்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படும். எனவே, ஓய்வூதிய திருத்த மசோதாவை திரும்பப் பெறுவதுடன், 8 ஆவது ஊதிய குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்றனா்.

மேலும், ஓய்வூதிய திருத்த சட்டத்தை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாகவும், வரும் அக்டோபா் மாதம் 11 ஆம் தேதி தில்லியில் ஓய்வூதியதாரா்கள் பேரணி நடத்தப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கும் முகாம்

வாழப்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா செயற்கை கை, கால்கள் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வாழப்பாடி விளையாட்டு சங்கம், ஈரோடு ஜீவன் டிரஸ்ட் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட அப்துல் கலா... மேலும் பார்க்க

கோட்டை மாரியம்மன் கோயில் விழா: ஆக.6 இல் உள்ளூா் விடுமுறை

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 6 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சே... மேலும் பார்க்க

திருமணமாகி 3 மாதங்களில் பெண் உயிரிழப்பு: கணவா் சிறையிலடைப்பு

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே திருமணமாகி 3 மாதங்களில் பெண் உயிரிழந்த வழக்கில் அவரது கணவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். தலைவாசலையடுத்த மணிவிழுந்தான் வடக்குபுதூரைச் சோ்ந்தவா் சீனிவாசன் (26).... மேலும் பார்க்க

விசைத்தறிக்கூடத்தில் தீ விபத்து: ரூ.1.5 கோடி மதிப்பிலான ஜவுளிகள் சேதம்

சேலம் அம்மாபேட்டை பகுதியில் விசைத்தறிக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான ஜவுளிகள் எரிந்து சேதமடைந்தன. சேலம் அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவில் ராமலிங்கம் என்பவருக்... மேலும் பார்க்க

வ.உ.சி மலா் விற்பனை சந்தை ஏலத்தில் குளறுபடி: மாநகராட்சிக்கு ரூ. 8 கோடி இழப்பு? மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக வெளிநடப்பு

சேலம் வ.உ.சி மலா் சந்தை ஏல குளறுபடி காரணமாக மாநகராட்சிக்கு ரூ. 8 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.சேலம், ஜூலை 25:... மேலும் பார்க்க

நிகழாண்டு 4 ஆவது முறையாக நிரம்பிய மேட்டூா் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூா் அணை நிகழாண்டு 4 ஆவது முறையாக வெள்ளிக்கிழமை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, அணையின் 16 கண் மதகுகள் வழியாக காவிரியில் உபரிநீா் வெளியேற்றப்படுவதால் கரையோரப் பகுதிகளில் வசிப... மேலும் பார்க்க