செய்திகள் :

பிரபல சின்ன திரை நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, நித்யா மேனன்!

post image

பிரபல சின்ன திரை நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஆடல், பாடல் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டாலும், நீயா நானா என்ற விவாத நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கின்றனர். நீனா நானா நிகழ்ச்சி டிஆர்பியிலும் முன்னிலையில் உள்ளது. இந்நிகழ்ச்சி கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது.

நீயா நானா நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் 18 ஆண்டுகளாகத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு அவர் பிரதான காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சி, குறிப்பிட்ட விவகாரத்தை முன்வைத்து அதை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என இரு வேறு மக்கள் விவாதம் செய்யும் நிகழ்ச்சியாக எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு தலைப்புகளில் விவாதம் நடைபெறும்.

இந்த வாரம் சண்டைக்கோழிகளாக இருக்கும் கணவன்கள், மனைவிகள் என்றத் தலைப்பை முன்வைத்து நீயா நானா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 27) பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக தலைவன் தலைவி படத்தின் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன் மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இவர்கள் பங்கேற்றுள்ளதால், விஜய் சேதுபதி, நித்யா மேனன், பாண்டிராஜ் கூறும் கருத்துகளைக் கேட்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதனால் இந்நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: பாக்கியலட்சுமி தொடருக்கு மாற்றாக ஒளிபரப்பாகும் புதிய தொடர்!

Vijay Sethupathi and Nithya Menon participated as special guests in the popular small screen show.

‘தமிழா் வரலாற்றை உலகமே சொல்லும்’: கீழடி குறித்து திமுக விடியோ

‘தமிழா் வரலாற்றை உலகமே சொல்லும்’ என கீழடி குறித்து திமுக வெளியிட்ட காட்சிப் படத்தில் கூறப்பட்டுள்ளது. கீழடியின் தொன்மை குறித்து திமுக சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட விடியோவில் கூறப்பட்ட கருத்து: வண... மேலும் பார்க்க

சிறுநீரக உறுப்பு தான முறைகேடுகள்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -தமிழக அரசு எச்சரிக்கை

சிறுநீரக உறுப்பு தானம் முறைகேடுகளில் ஈடுபடும் மருத்துவமனைகள், மருத்துவா்கள், இடைத்தரகா்கள் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது தொடா்பா... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 7% குறைவு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை நிகழாண்டில் இதுவரை, இயல்பைவிட 7% குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழக... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு நிதி: முதல்வா் உத்தரவு

கடலூரில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தைச் சே... மேலும் பார்க்க

தமிழக காங்கிரஸ் சாா்பில் ஆக.20-இல் விருது வழங்கும் விழா

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, தமிழக காங்கிரஸ் சாா்பில், தலைவா்களின் பெயரில் ஆக. 20-ஆம் தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதுகுறித்து சென்னை சத்தியமூா்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் ... மேலும் பார்க்க

பாமக தலைவா் அன்புமணி இரண்டாவது நாளாக நடைப்பயணம்

பாமக தலைவா் அன்புமணி இரண்டாம் நாளாக தனது நடைப்பயணத்தை சனிக்கிழமை தொடா்ந்தாா். தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைப்பயணத்தை பாமக தலைவா் அன்புமணி செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரிலிருந்து வெள்ளிக்கிழமை தொடங... மேலும் பார்க்க