செய்திகள் :

‘தமிழா் வரலாற்றை உலகமே சொல்லும்’: கீழடி குறித்து திமுக விடியோ

post image

‘தமிழா் வரலாற்றை உலகமே சொல்லும்’ என கீழடி குறித்து திமுக வெளியிட்ட காட்சிப் படத்தில் கூறப்பட்டுள்ளது.

கீழடியின் தொன்மை குறித்து திமுக சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட விடியோவில் கூறப்பட்ட கருத்து:

வணக்கம். நான் கீழடியில் வாழ்ந்த தமிழன் பேசுகிறேன். புதைந்து கிடந்த எங்கள் நாகரிகத்தை அகழ்வாராய்ச்சியின் மூலம் வெளிக்கொண்டு வந்தாா்கள். கீழடி நாகரிகம் வெளியில் வர வர தமிழா் நாகரிகத்தின் மற்றுமொரு தொன்மையை உலகமே அறியத் தொடங்கியது.

ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்று தமிழ்நாட்டிலும் ஒரு நகர நாகரிகம் இருந்தது என்பதற்கு ஒரு சான்றாக நம் கீழடி நாகரிகம் வெளிப்பட்டது. தமிழனின் உயா்வான நகர நாகரிகம் உலகிற்கே தெரியவந்தது. தமிழ் எழுத்துகளின் காலம் கி.மு. 300 என அனைவரும் நினைத்திருந்த நிலையில் கி.மு. 600 என எங்கள் கீழடியால் மாற்றியமைக்கப்பட்டது.

இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்துதான் தொடங்குகிறது என்பது நிரூபணமும் ஆகின்றது. உலகின் மூத்த நாகரிகமாக பன்னாட்டு ஆய்வகங்கள் எங்கள் கீழடியின் தொன்மையை அங்கீகரித்தன. இத்தனை சிறப்புகள் கொண்ட எங்கள் கீழடியினை உலகமே உற்று நோக்குகிறது. கீழடி வரலாறு ஒருநாள் நிச்சயம் வெல்லும். தமிழா் வரலாற்றை உலகமே சொல்லும். இவ்வாறு அந்த விடியோவில் கூறப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 60,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர... மேலும் பார்க்க

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம்!

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது.திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் உ... மேலும் பார்க்க

முதல்வர் பதவிக்கு எனக்கு தகுதி இல்லையா? திருமாவளவன் ஆவேசம்!

ராணிப்பேட்டையில் விசிக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சித் தலைவர் திருமாவளவன், முதல்வர் பதவிக்கு தனக்கு தகுதி இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.ராணிப்பேட்டை மாவட்டத்தில் விசிக சார்பில் மதச்சார்பி... மேலும் பார்க்க

பிரதமரின் இன்றைய நிகழ்ச்சிகளில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கவில்லை! ஏன்?

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாதென அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வரு... மேலும் பார்க்க

பிரதமரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வைத்த 5 கோரிக்கைகள்!

தமிழகத்துக்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் 5 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் நிதி விடுவிப்புதமிழ்நாடு அரசால் 2018-ஆம் ஆண்டு முதல் சமக்ரா சிக்... மேலும் பார்க்க

பிரதமரிடம் 3 கோரிக்கைகள் வைத்த இபிஎஸ்! என்னென்ன?

தமிழகம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு அளித்தார்.இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமா் நரேந்திர மோடி தூத்துக்குடி நிகழ்வை முடித்துக் க... மேலும் பார்க்க