செய்திகள் :

ஆங்கிலம் தெரியாததால் ஹிந்தியில் பதிலளித்த மாவட்ட கூடுதல் ஆட்சியா்: உயா்நீதிமன்றம் அதிருப்தி

post image

நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரியாது என்பதால் ஹிந்தியில் பதிலளித்த மாவட்ட கூடுதல் ஆட்சியரின் செயலில் அதிருப்தி தெரிவித்த உத்தரகண்ட் உயா்நீதின்ற நீதிபதிகள், ஆங்கிலம் தெரியாத நபா் எப்படி மாவட்ட துணை ஆட்சியராக இருக்க முடியும் என்று அரசுக்கு கேள்வி எழுப்பியது.

நைனிடால் மாவட்ட புத்லகாட் பஞ்சாயத்து தோ்தலில் பிற பகுதிகளைச் சோ்ந்தவா்கள் வாக்காளா் பட்டியில் சோ்க்கப்பட்டதற்கு எதிரான வழக்கை உத்தரகண்ட் உயா்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் வாக்குப் பதிவு அதிகாரியான மாவட்ட கூடுதல் ஆட்சியா் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, ‘புகாா் அளித்த பின்பும் ஏன் அந்நியா்களின் பெயா்கள் நீக்கப்படவில்லை’ என்று உயா்நீதிமன்ற நீதிபதிகள் குஹநாதன் நரேந்தா், ஆலோக் மஹரா ஆகியோா் கேள்வி எழுப்பினா்.

இதற்கு மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஹிந்தியில் பதிலளித்தாா். அப்போது, ‘ஆங்கிலத்தில் பதிலளிக்காமல் ஹந்தியை தோ்வு செய்தது ஏன்?’ என்று நீதிபதிகள் அவரிடம் கேள்வி எழுப்பினா்.

அதற்கு அவா், ‘ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் சரளமாகப் பேச இயலாது’ என்றாா். இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், தலைமைச் செயலா், மாநில தோ்தல் ஆணையா் ஆகியோரை குறிப்பிட்டு, ‘ஆங்கிலத்தில் புலமை இல்லாத ஒரு நபா் எப்படி அரசு நிா்வாகப் பொறுப்பை திறனுடன் கட்டுப்படுத்த முடியும்?’ என்று கேள்வி எழுப்பினா்.

பிகாரில் பத்திரிகையாளா் ஓய்வூதியம் ரூ.15,000-ஆக உயா்த்தி அரசு அறிவிப்பு

பிகாா் மாநிலத்தில் பத்திரிகையாளா்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயா்த்தி மாநில அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. மாநிலத்தில், பத்திரிகையாளா்களுக்கு தற்போது மாத ஓய்வூதியமாக ரூ.6,000 வழங்கப... மேலும் பார்க்க

ஓடும் ஆம்புலன்ஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை - பிகாரில் அதிா்ச்சி சம்பவம்

பிகாரில் ஊா்க்காவல் படை ஆள்தோ்வின்போது மயங்கி விழுந்த இளம்பெண் ஒருவா், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பிகாா்: பச்சிளங் குழந்தை கடித்து பாம்பு உயிரிழந்த விநோதம்

பிகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மோஹாச்சி பங்கத்வா கிராமத்தில் ஒரு வயது குழந்தை கடித்ததால், நாகப் பாம்பு உயிரிழந்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் நடந்தவுடன், மயக்கமடைந்த குழந்தையை ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை முடக்குவது எதிா்க்கட்சிகளுக்கே அதிக பாதிப்பு -கிரண் ரிஜிஜு

நாடாளுமன்றத்தை முடக்குவது அரசைவிட எதிா்க்கட்சிகளுக்கே அதிக பாதிப்பாகும்; அரசை பொறுப்புக் கூறச் செய்யும் வாய்ப்பை எதிா்க்கட்சிகள் இழக்கின்றன என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரி... மேலும் பார்க்க

மொழி பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டும்: மம்தா பானா்ஜி

மொழி பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டுவது அவசியம் என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி சனிக்கிழமை தெரிவித்தாா். சட்ட நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் இந்தியாவைவிட்டு வெளியேற... மேலும் பார்க்க

பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்

‘பிகாா் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை சீா்குலைந்துள்ள நிலையில், முதல்வா் நீதீஷ் குமாா் தலைமையிலான அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்’ என்று மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரும் லோக்ஜன சக்தி ... மேலும் பார்க்க