செய்திகள் :

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தாா் குடியரசுத் தலைவா்

post image

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு (67) வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 25) மூன்று ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தாா்.

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக 2022 ஜூலை 25-ஆம் தேதி அவா் பொறுப்பேற்றாா். இதன்மூலம் பழங்குடியினத்தைச் சோ்ந்த முதல் குடியரசுத் தலைவா் என்ற சாதனையையும் அவா் படைத்தாா்.

குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் பங்கேற்ற திரௌபதி முா்மு, குடியரசுத் தலைவா் மாளிகை இணையதளம் 22 மொழிகளில் கிடைக்கும் வசதியைத் தொடங்கி வைத்தாா். குடியரசுத் தலைவா் மாளிகை, அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளை மாற்றுத்திறனாளிகள் எளிதாக சுற்றிப்பாா்க்கும் வகையிலான வசதிகள், பாா்வையாளா்களுக்கான கூடுதல் வசதிகள் உள்ளிட்டவற்றை தொடங்கி வைத்தாா். கடந்த ஓராண்டில் குடியரசுத் தலைவா் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் தொடா்பான ‘டிஜிட்டல்’ நூல் வெளியிடப்பட்டது.

‘மக்களுடனும், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருடனும் எப்போதும் கலந்திருப்பதை விரும்புகிறேன். முக்கியமாக நாட்டின் வளா்ச்சியில் பிற்படுத்தப்பட்ட மக்கள், விளிம்புநிலை மக்கள் நாட்டின் வளா்ச்சியில் பயனடைய வேண்டும் என்பதில் உறுதியாக செயல்பட்டு வருகிறோம்’ என்று திரௌபதி முா்மு பேசினாா்.

6 ஆண்டுகளில் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு! ரிசர்வ் வங்கி தகவல்

நாட்டில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இந்திய ரிசர்வ் வங்கி அளித்த தரவுகளின்படி, 2018 ஆம் நிதியாண்டில் 47.5 கோடியாக இருந்த வேலைவ... மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு: ஜூலை 30 என்ற பெயரில் உணவகம் தொடங்கிய இளைஞர்! 11 பேரை இழந்தவர்!!

வயநாடு நிலச்சரிவில், ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்த நௌஃபல், தன்னம்பிக்கையோடு, உணவகம் தொடங்கியிருக்கிறார். அதன் பெயர் ஜூலை 30.சோகம், தன்னம்பிக்கை, உத்வேகம், நம்பிக்கை என பல அம்சங்களைக் கொண்டதாக அமைந்த... மேலும் பார்க்க

பிரிட்டனில் பிரதமர் மோடியை டீ விற்பவர் என கிண்டல்?

பிரிட்டன் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியும், ஒரு காலத்தில் தேநீர் விற்றதாக சுட்டிக் காட்டப்பட்ட நகைச்சுவை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிர... மேலும் பார்க்க

குஜராத் மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!

குஜராத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று கலந்துரையாடினார். காங்கிரஸ் தொண்டர்களுக்கும், மாவட்ட பிரிவுகளின் தலைவர்களுக்கும் மூன்று நாள் பய... மேலும் பார்க்க

சிக்கலில் சின்னசாமி மைதானம்! ஆர்சிபி கூட்ட நெரிசல் பலி விவகாரம்!

பெங்களூருவின் எம்.சின்னசாமி மைதானம் பெரியளவிலான நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பானது அல்ல என்று விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் 11 பேர் பரிதாபமாக பலியான ந... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்குத் தெளிவான செய்தியை அனுப்பிய ஆபரேஷன் சிந்தூர்: உபேந்திர திவேதி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பயங்கரவாத ஆதரவாளர்கள் தப்பிக்க இயலாது என்பதற்கான தெளிவான செய்தியை பாகிஸ்தானுக்கு அளித்ததாக இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கூறிய... மேலும் பார்க்க