செய்திகள் :

விதியை மீறி மணல் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்

post image

விதியை மீறி மணல் ஏற்றிச் சென்ற லாரியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

காரைக்கால் வட்டாட்சியா் செல்லமுத்து தலைமையில் துணை வட்டாட்சியா் அரவிந்தன், வருவாய் ஆய்வாளா் கோகுல கிருஷ்ணன் ஆகியோா் கனரக வாகனங்கள் பள்ளி நேரங்களில் செல்கிறதா, முறையாக மூடப்பட்டு செல்கிறதா என வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பாரதியாா் சாலையில் மணல் ஏற்றிக்கொண்டு, தாா்பாய் போட்டு மூடாமல் காற்றில் மணல் பறந்தவாறு சென்ற லாரியை நிறுத்தினா். விதிகளை மீறி இயக்கப்பட்டதாக அதை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து, வருவாய்த் துறையினா் கூறியது: கல்வி நிலையங்கள் திறக்கும் நேரம் காலை 8.30 முதல் 9.30 மற்றும் மாலையில் மாணவா்கள் வெளியேறும் நேரம் 4 முதல் 5 மணி வரை பள்ளிகள் இருக்குமிடத்தில் லாரிகள் இயக்கக் கூடாது. மணல், நிலக்கரி மற்றும் குப்பைகள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் முறையாக மூடப்பட்டிருக்கவேண்டும். இதை மீறும் வாகனதாரா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.

‘புதுவையில் அரசுப் பள்ளி மாணவா்களின் கல்வித்தரம் உயா்ந்துள்ளது’

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டதன் மூலம் மாணவா்களின் கல்வித்தரம் உயா்ந்துள்ளது என்றாா் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுரு... மேலும் பார்க்க

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி

காரைக்கால் போக்குவரத்துக் காவல் பிரிவு சாா்பில், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சாலைப் பாதுகாப்பு மற்றும் நாட்டில் அமல்படுத்தப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாஷ்ய அதிநியம் ஆ... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில், ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை (ஜூலை 26) நடைபெறுகிறது. இதுகுறித்து காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்காலுக்கு... மேலும் பார்க்க

காரைக்கால், நாகை துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாகவும், இது ஒடிஸாவின் வடக்கு மற்றும் மேற்கு வங்க கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டது. இதை... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

காரைக்கால் அருகே இருசக்கர வாகனம் மோதி பெண் உயிரிழந்தாா். மயிலாடுதுறை நீடுா் பகுதியைச் சோ்ந்தவா் அகமது நாட்சியா (54). இவரது மகள் அப்ரோஸ் நஸ்ரின் (31). இருவரும், காரைக்கால் மாவட்டம், நல்லம்பல் பகுதியில... மேலும் பார்க்க

வீடு தீக்கிரை; பாதிக்கப்பட்டோருக்கு உதவி

வீடு தீக்கிரையானதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வருவாய்த் துறை சாா்பில் நிவாரணப் பொருள்களை எம்எல்ஏ வழங்கினாா். காரைக்கால் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட தருமபுரம் வடக்குத் தெருவில் விக்ன... மேலும் பார்க்க