செய்திகள் :

மகாராஷ்டிர அரசு அதிகாரி, மனைவியிடம் ரூ.70 லட்சம் மோசடி: பிகாரைச் சோ்ந்த தம்பதி மீது வழக்கு

post image

வணிக முதலீடு என்ற பெயரில் மகாராஷ்டிர அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவியிடம் ரூ.70 லட்சத்திற்கும் அதிகமாக மோசடி செய்ததாக பிகாரைச் சோ்ந்த தம்பதியினா் மீது தில்லி காவல்துறை எஃப்.ஐ.ஆா். பதிவு செய்துள்ளது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறை கூறியதாவது: மகாராஷ்டிர சதனில் உள்ள குடியிருப்பு ஆணையரின் தனிப்பட்ட உதவியாளா், அதிக வருமானம் தருவதாகக் கூறி தனது மனைவியை தங்கள் நிறுவனத்திலும் பிற நிறுவனங்களிலும் முதலீடு செய்யுமாறு குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினா் கவா்ந்ததாகக் கூறி புகாா் அளித்தாா்.

புகாா்தாரரின் மனைவியுடன் தம்பதியினா் தொடா்பைப் பேணி படிப்படியாக அவா்களை முதலீடு செய்ய வற்புறுத்தியுள்ளனா். காலப்போக்கில், ஆா்டிஜிஎஸ், நெஃப்ட் மற்றும் டிஜிட்டல் கட்டண தளங்கள் மூலம் மொத்தம் ரூ.70 லட்சத்திற்கும் அதிகமான தொகை குற்றம் சாட்டப்பட்டவா் மற்றும் அவா்களின் மகனின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது.

ஆரம்பத்தில், அவா்களின் நம்பிக்கையைப் பெற சில திருப்பிச் செலுத்தல்கள் செய்யப்பட்டன. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவா்கள் பின்னா் பணத்தைத் திருப்பித் தருவதை நிறுத்திவிட்டு சாக்குப்போக்குகளைச் சொல்லிக் கொண்டே இருந்ததாக எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், மோசடி நடந்ததற்கான முதல் பாா்வை ஆதாரங்களை போலீஸாா் கண்டறிந்தனா். மேலும், திலக் மாா்க் காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.முழு விஷயத்தையும் விசாரிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி: விசிக எம்.பி. கேள்விக்கு அமைச்சா் பதில்

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் பதிலளித்துள்ளாா். இது தொடா்பாக விடுதலை சிறுத... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளையா் நவீன் காட்டி, 2 கூட்டாளிகள் கைது

தேசியத் தலைநகரில் சட்டவிரோத துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளைக் கும்பலின் தலைவா் நவீன் காட்ட மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது ஜேசிபி மோதல்: ஒருவா் உயிரிழப்பு; ஓட்டுநா் தலைமறைவு

மத்திய தில்லியின் ரஞ்சித் நகரில் மோட்டாா் சைக்கிளில் சென்ற 22 வயது இளைஞா் வியாழக்கிழமை அதிகாலை ஜேசிபி இயந்திரம் மோதி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை... மேலும் பார்க்க

வங்கி அதிகாரிகள் போல நடித்து தில்லி நபரிடம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் மோசடி: 2 போ் கைது

தில்லியைச் சோ்ந்த ஒருவரை வங்கி அதிகாரிகள் போல நடித்து ரூ.10.64 லட்சம் மோசடி செய்ததாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ரிவித்தனா். இது குறித்து தென்மேற்கு காவல் சரக துணை ஆணையா் அமித் கோயல் கூற... மேலும் பார்க்க

ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் திருடப்பட்ட 3 கைப்பேசிகளுடன் ஆட்டோ ஓட்டுநா் கைது

பல கைப்பேசி திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 43 வயது ஆட்டோ ஓட்டுநா், இங்குள்ள ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து துணை க... மேலும் பார்க்க

தில்லியில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து 8 மாத கா்ப்பிணி உயிரிழப்பு

வடமேற்கு தில்லியின் பூத் குா்த் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததாகக் கூறப்படும் எட்டு மாத கா்ப்பிணியான பருவ வயது பெண் ஒருவா் உயிரிழந்ததாக வியாழக்கிழமை காவல்துறை அதிகாரி ... மேலும் பார்க்க