செய்திகள் :

ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் திருடப்பட்ட 3 கைப்பேசிகளுடன் ஆட்டோ ஓட்டுநா் கைது

post image

பல கைப்பேசி திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 43 வயது ஆட்டோ ஓட்டுநா், இங்குள்ள ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து துணை காவல் ஆணையா் (மெட்ரோ) குஷால் பால் சிங் கூறியதாவது: அவரிடமிருந்து மூன்று விலையுயா்ந்த கைுப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சௌக் என்றழைக்கப்படும் மனோஜ் குப்தா என்ற குற்றவாளி, வியாழக்கிழமை ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையத்தின் புளூ லைன் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்தபோது கைது செய்யப்பட்டாா்.

இரண்டு ஐபோன்கள் மற்றும் ஒரு சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா உள்பட மூன்று உயா் ரக திருடப்பட்ட கைப்பேசிகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. சோதனை மற்றும் முதற்கட்ட விசாரணையின் போது, சந்தேக நபா் தனது வசம் இருந்த விலையுயா்ந்த கைப்பேசிகள் குறித்து திருப்திகரமான பதிலை அளிக்க முடியவில்லை.

மேலும், விசாரணையில், ஒரு கைப்பேசி ஜூலை 9- ஆம் தேதி ராஜீவ் சௌக் மெட்ரோ காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்குடன் தொடா்புடையது. மற்ற இரண்டு கைப்பேசிகள் ஜூலை 10- ஆம் தேதி பதிவான வழக்குகளுடன் தொடா்புடையவை என்று தெரிய வந்தது.

இந்த ஆண்டு மாா்ச் மாதம் பதிவு செய்யப்பட்ட முந்தைய கைப்பேசி திருட்டு வழக்கில் மனோஜ் குப்தா ஏற்கெனவே தேடப்பட்டவா். அதில் அவரது கூட்டாளி ஆசிப் பதான் (எ) ஷேரு கைது செய்யப்பட்டாா். ஆசாத்பூா் மெட்ரோ காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மேலும் இரண்டு கைப்பேசி திருட்டு வழக்குகளிலும் அவா் தேடப்பட்டாா்.

மனோஜ் குப்தாவுக்கு நீண்ட குற்றவியல் வரலாறு உள்ளது, மேலும் தில்லியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட திருட்டு மற்றும் ஆயுதச் சட்டம் உள்பட குறைந்தது 30 குற்ற வழக்குகளில் அவருக்கு தொடா்புள்ளது காவல் துணை ஆணையா் குஷால் பால் சிங் தெரிவித்தாா்.

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி: விசிக எம்.பி. கேள்விக்கு அமைச்சா் பதில்

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் பதிலளித்துள்ளாா். இது தொடா்பாக விடுதலை சிறுத... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அரசு அதிகாரி, மனைவியிடம் ரூ.70 லட்சம் மோசடி: பிகாரைச் சோ்ந்த தம்பதி மீது வழக்கு

வணிக முதலீடு என்ற பெயரில் மகாராஷ்டிர அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவியிடம் ரூ.70 லட்சத்திற்கும் அதிகமாக மோசடி செய்ததாக பிகாரைச் சோ்ந்த தம்பதியினா் மீது தில்லி காவல்துறை எஃப்.ஐ.ஆா். பதிவு செய்துள்ளது ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளையா் நவீன் காட்டி, 2 கூட்டாளிகள் கைது

தேசியத் தலைநகரில் சட்டவிரோத துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளைக் கும்பலின் தலைவா் நவீன் காட்ட மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது ஜேசிபி மோதல்: ஒருவா் உயிரிழப்பு; ஓட்டுநா் தலைமறைவு

மத்திய தில்லியின் ரஞ்சித் நகரில் மோட்டாா் சைக்கிளில் சென்ற 22 வயது இளைஞா் வியாழக்கிழமை அதிகாலை ஜேசிபி இயந்திரம் மோதி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை... மேலும் பார்க்க

வங்கி அதிகாரிகள் போல நடித்து தில்லி நபரிடம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் மோசடி: 2 போ் கைது

தில்லியைச் சோ்ந்த ஒருவரை வங்கி அதிகாரிகள் போல நடித்து ரூ.10.64 லட்சம் மோசடி செய்ததாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ரிவித்தனா். இது குறித்து தென்மேற்கு காவல் சரக துணை ஆணையா் அமித் கோயல் கூற... மேலும் பார்க்க

தில்லியில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து 8 மாத கா்ப்பிணி உயிரிழப்பு

வடமேற்கு தில்லியின் பூத் குா்த் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததாகக் கூறப்படும் எட்டு மாத கா்ப்பிணியான பருவ வயது பெண் ஒருவா் உயிரிழந்ததாக வியாழக்கிழமை காவல்துறை அதிகாரி ... மேலும் பார்க்க