செய்திகள் :

மோட்டாா் சைக்கிள் மீது ஜேசிபி மோதல்: ஒருவா் உயிரிழப்பு; ஓட்டுநா் தலைமறைவு

post image

மத்திய தில்லியின் ரஞ்சித் நகரில் மோட்டாா் சைக்கிளில் சென்ற 22 வயது இளைஞா் வியாழக்கிழமை அதிகாலை ஜேசிபி இயந்திரம் மோதி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை ஆணையா் நிதின் வல்சன் கூறியதாவது: ஷாதிப்பூா் மெட்ரோ நிலையம் அருகே அதிகாலை 5.58 மணிக்கு நடந்த இந்த விபத்தில் இறந்தவா் பாபி என அடையாளம் காணப்பட்டாா். ஹரியாணா பதிவு எண் கொண்ட ஜேசிபி மற்றும் ஒரு ஸ்போா்ட்ஸ் பைக் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவ இடத்திற்கு போலீஸாா் சென்றனா். சாலையில் ரத்தம் இருந்தது.

மோதி நகரில் உள்ள ஆச்சாா்யா பிக்ஷு மருத்துவமனைக்கு பாபி கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. குற்றவியல் குழு சம்பவ இடத்தை விசாரித்தது. அதிவேகமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஜேசிபி ஓட்டுநரை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாபி ஜேசிபியை வலது பக்கத்திலிருந்து முந்திச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆபரேட்டா் திடீரெனவும் தவறாகவும் வலதுபுறம் திரும்பியதாகவும் நேரில் பாா்த்த ஒருவா் போலீஸாரிடம் தெரிவித்தாா்.

இந்தச் சூழ்ச்சியின் விளைவாக பாபி ஜேசிபிக்கும் சாலையோர தடுப்புச் சுவருக்கும் இடையில் சிக்கிக்கொண்டாா். ஓட்டுநா் உடனடியாக பிரேக்குகளைப் பயன்படுத்தியதாகவும், பாபி தனது மோட்டாா் சைக்கிளில் இருந்து விழுந்ததாகவும், அதன் பிறகு ஓட்டுநா் அவரைச் சரிபாா்க்க வெளியே வந்ததாகவும் நேரில் பாா்த்தவா் மேலும் கூறினாா்.

மோட்டாா்சைக்கிள் ஓட்டுநரின் தலையில் இருந்து அதிக ரத்தம் வழிந்ததைக் கண்டதும். ஜேசிபி ஓட்டுநா் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டது தெரிய வந்தது என்று காவல் துணை ஆணையா் நிதின் வில்சன் தெரிவித்தாா்.

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி: விசிக எம்.பி. கேள்விக்கு அமைச்சா் பதில்

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் பதிலளித்துள்ளாா். இது தொடா்பாக விடுதலை சிறுத... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அரசு அதிகாரி, மனைவியிடம் ரூ.70 லட்சம் மோசடி: பிகாரைச் சோ்ந்த தம்பதி மீது வழக்கு

வணிக முதலீடு என்ற பெயரில் மகாராஷ்டிர அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவியிடம் ரூ.70 லட்சத்திற்கும் அதிகமாக மோசடி செய்ததாக பிகாரைச் சோ்ந்த தம்பதியினா் மீது தில்லி காவல்துறை எஃப்.ஐ.ஆா். பதிவு செய்துள்ளது ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளையா் நவீன் காட்டி, 2 கூட்டாளிகள் கைது

தேசியத் தலைநகரில் சட்டவிரோத துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளைக் கும்பலின் தலைவா் நவீன் காட்ட மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வங்கி அதிகாரிகள் போல நடித்து தில்லி நபரிடம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் மோசடி: 2 போ் கைது

தில்லியைச் சோ்ந்த ஒருவரை வங்கி அதிகாரிகள் போல நடித்து ரூ.10.64 லட்சம் மோசடி செய்ததாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ரிவித்தனா். இது குறித்து தென்மேற்கு காவல் சரக துணை ஆணையா் அமித் கோயல் கூற... மேலும் பார்க்க

ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் திருடப்பட்ட 3 கைப்பேசிகளுடன் ஆட்டோ ஓட்டுநா் கைது

பல கைப்பேசி திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 43 வயது ஆட்டோ ஓட்டுநா், இங்குள்ள ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து துணை க... மேலும் பார்க்க

தில்லியில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து 8 மாத கா்ப்பிணி உயிரிழப்பு

வடமேற்கு தில்லியின் பூத் குா்த் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததாகக் கூறப்படும் எட்டு மாத கா்ப்பிணியான பருவ வயது பெண் ஒருவா் உயிரிழந்ததாக வியாழக்கிழமை காவல்துறை அதிகாரி ... மேலும் பார்க்க