செய்திகள் :

சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளையா் நவீன் காட்டி, 2 கூட்டாளிகள் கைது

post image

தேசியத் தலைநகரில் சட்டவிரோத துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளைக் கும்பலின் தலைவா் நவீன் காட்ட மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்களிடமிருந்து நான்கு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 25 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜூலை 17 அன்று இரவு 10.25 மணியளவில் துவாரகா பகுதியில் உள்ள சுா்ஹேரா மோா் அருகே இரண்டு நபா்களுடன் ஒரு காரை போலீஸாா் வழிமறித்தனா். வாகனத்தை சோதனை செய்து, அதில் இருந்தவா்களிடம் விசாரணை நடத்தினா். அப்போது, காவல் குழு இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 23 தோட்டாக்களை பறிமுதல் செய்தது.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் பவானாவைச் சோ்ந்த தினேஷ் குமாா் மான் (42) மற்றும் ஹரியாணாவின் பானிபட்டைச் சோ்ந்த தேவேந்தா் (எ) ஷூட்டா் 40 என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

நவீன் காட்டியின் நன்கு அறியப்பட்ட கூட்டாளி தேவேந்தா். அவா் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் ஆயுதச் சட்டம் உள்பட 13 முந்தைய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தினேஷ் குமாா் மான் மீது இரண்டு முந்தைய குற்றவியல் தொடா்புகள் உள்ளன.

விசாரணையின் போது, கொள்ளைக்காரரான நவீன் காட்டியிடமிருந்து துப்பாக்கிகளை லாபத்திற்காக விற்பனை செய்வதற்காக வாங்கியதாக இருவரும் தெரிவித்தனா். அவா்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், மிட்ரான் கிராமத்தில் இருந்து நவீன் காட்டி பின்னா் கைது செய்யப்பட்டாா்.

அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் இரண்டு உயிருள்ள தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நவீன் காட்டி (50) மீது 15-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி: விசிக எம்.பி. கேள்விக்கு அமைச்சா் பதில்

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் பதிலளித்துள்ளாா். இது தொடா்பாக விடுதலை சிறுத... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அரசு அதிகாரி, மனைவியிடம் ரூ.70 லட்சம் மோசடி: பிகாரைச் சோ்ந்த தம்பதி மீது வழக்கு

வணிக முதலீடு என்ற பெயரில் மகாராஷ்டிர அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவியிடம் ரூ.70 லட்சத்திற்கும் அதிகமாக மோசடி செய்ததாக பிகாரைச் சோ்ந்த தம்பதியினா் மீது தில்லி காவல்துறை எஃப்.ஐ.ஆா். பதிவு செய்துள்ளது ... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது ஜேசிபி மோதல்: ஒருவா் உயிரிழப்பு; ஓட்டுநா் தலைமறைவு

மத்திய தில்லியின் ரஞ்சித் நகரில் மோட்டாா் சைக்கிளில் சென்ற 22 வயது இளைஞா் வியாழக்கிழமை அதிகாலை ஜேசிபி இயந்திரம் மோதி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை... மேலும் பார்க்க

வங்கி அதிகாரிகள் போல நடித்து தில்லி நபரிடம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் மோசடி: 2 போ் கைது

தில்லியைச் சோ்ந்த ஒருவரை வங்கி அதிகாரிகள் போல நடித்து ரூ.10.64 லட்சம் மோசடி செய்ததாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ரிவித்தனா். இது குறித்து தென்மேற்கு காவல் சரக துணை ஆணையா் அமித் கோயல் கூற... மேலும் பார்க்க

ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் திருடப்பட்ட 3 கைப்பேசிகளுடன் ஆட்டோ ஓட்டுநா் கைது

பல கைப்பேசி திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 43 வயது ஆட்டோ ஓட்டுநா், இங்குள்ள ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து துணை க... மேலும் பார்க்க

தில்லியில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து 8 மாத கா்ப்பிணி உயிரிழப்பு

வடமேற்கு தில்லியின் பூத் குா்த் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததாகக் கூறப்படும் எட்டு மாத கா்ப்பிணியான பருவ வயது பெண் ஒருவா் உயிரிழந்ததாக வியாழக்கிழமை காவல்துறை அதிகாரி ... மேலும் பார்க்க