செய்திகள் :

Haryana: பாலியல் வழக்கில் சிறைக்கு சென்ற எம்.பி மகனுக்கு `துணை அட்வகேட் ஜெனரல்' பதவி

post image

ஹரியானாவில் பாஜக எம்.பி சுபாஷ் பரலாவின் மகன் விகாஷ் பரலாவை அம்மாநில அரசு துணை அட்வகேட் ஜெனரலாக நியமித்திருக்கிறது.

இந்த விகாஷ் பரலா, காரில் பெண் ஒருவரை துரத்திச் சென்று தொந்தரவு செய்த விவகாரத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டவர். இதனால் விகாஷ் பரலாவின் நியமனம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகள் 2017 -ல் ஆகஸ்ட் 4 ஆம் தேதியன்று காரில் சென்று கொண்டிருக்கையில், இன்னொரு காரில் வந்த விகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் அந்த பெண்ணின் காரை துரத்தி அவரை வழிமறித்து தொந்தரவு செய்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் விகாஷ் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் சிறையிலும் இருந்தார். அதன்பிறகு பெயில் கிடைக்கவே சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டார். ஆனால், இன்னமும் அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில்தான் விகாஷ் பரலாவை இப்போது அம்மாநிலத்தின் துணை அட்வகேட் ஜெனரலாக நியமித்திருக்கிறார்கள். இந்த நியமனம் பலத்த விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

"நீதி வேண்டி நிறைய அலைக்கழிப்புகளை எதிர்கொண்டுவிட்டேன். நிறைய காலம் காத்திருந்து விட்டேன். ஆனால், இன்னமும் எனக்கு நம்முடைய நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது." என பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

7 ஆண்டுகள் சிறை தண்டனை (அ) ஆயுள் தண்டனை... ஆப்ஷன் கொடுத்த உச்ச நீதிமன்றம் - ஒரு சுவாரஸ்ய வழக்கு!

நீதி தாமதமாக நிலைநாட்டப்படும் வழக்குகளை பார்த்திருப்போம். அப்படிப்பட்ட ஒரு கவனிக்கத்தக்க வழக்கில் கல்லூரி படிக்கும்போது செய்த குற்றத்துக்காக குற்றவாளிக்கு 67 வயதில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதி... மேலும் பார்க்க

குன்றத்தூர் அபிராமிக்கு சாகும்வரை சிறை - திருமணம் மீறிய உறவுக்காக குழந்தைகள் கொலை; தீர்ப்பு விவரம்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அருகே மூன்றாம் கட்டளை, அங்கனீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜய் (30.) இவரின் மனைவி அபிராமி (25). இந்தத் தம்பதியினிருக்கு அஜய் (6) என்ற மகனும், கார்னிகா (4) என்ற... மேலும் பார்க்க

``சம்பாதித்து சாப்பிடுங்க..'' - ரூ.12 கோடி, BMW கார் ஜீவனாம்சம் கேட்ட மனைவியிடம் உச்ச நீதிமன்றம்

விவாகரத்து வழக்கு ஒன்றில் மனைவிக்கு சாதகமான மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கணவர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று (ஜூல... மேலும் பார்க்க

Bengaluru Stampede: 'விராட் கோலியின் அந்த வீடியோ...' -ஆர்.சி.பி மீது குற்றம் சுமத்தும் கர்நாடகா அரசு

கர்நாடகா மாநிலம், பெங்களூரில் கடந்த ஜூன் மாதம் ஆர்.சி.பி அணி ஐ.பி.எல் கோப்பை வென்றதைக் கொண்டாடும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு ஆர்.சி.பி அணி நிர்வாகமே காரணம... மேலும் பார்க்க

திண்டுக்கல் சட்ட விரோத குவாரிகள்: "அதிகாரிகளின் கூட்டுச் சதியா?" - உயர்நீதிமன்றம் கேள்வி

குவாரியின் முன் பக்க கதவுகள் சீல் வைக்கப்பட்டு, பின்பக்கமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது என்று, சட்டவிரோதக் குவாரிகள் மீதான வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்ட தகவலால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை நேரில் ஆ... மேலும் பார்க்க

`வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி; ஆதார் ஏன் இல்லை?’ - உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்வி | முழு விவரம்

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், கடந்த ஜூன் மாதமே வாக்காளர் இறுதிப்பட்டியலை தயாரிக்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. பிறகு திடீர் அறிவிப்பாக அனைத்து வ... மேலும் பார்க்க