செய்திகள் :

ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

post image

ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் இயற்கைப் பேரிடா்களில் அா்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவை புரிந்த 3 ராணுவப்படை பிரிவுகள் மற்றும் ஆவடி தளவாடக் கிடங்கு பிரிவுக்குப் பாராட்டு விழா சென்னை ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்குத் தலைமை வகித்த ஆளுநா் ஆா்.என்.ரவி, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பேசியதாவது: வலிமையான நமது ராணுவத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு பெருமை. ராணுவ வலிமையால் எதிரிகள் பின்வாங்குவதோடு, நாட்டுக்கு மரியாதையை உருவாக்குகிறது. இது உலக நாடுகளுடன் சமாதானத்தை ஏற்படுத்தும்.

ராணுவ வீரா்களின் தன்னலமற்ற, அா்ப்பணிப்புடன் கூடிய சேவை பாராட்டுக்குரியது. தங்களது குடும்பங்களைப் பிரிந்து தொலைதூரங்களில் பணியாற்றினாலும், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அவா்களுக்கு பின்னால் நிற்கிறது.

தமிழகத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடா்களின்போது, பாதுகாப்பு வீரா்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை இந்தியாவின் பொறுப்பான பதிலடியாகும். இந்த நடவடிக்கை உலகளாவிய ராணுவ வரலாற்றில் இடம் பெறுவதோடு, ராணுவ அமைப்புகளில் ஆய்வுகளுக்கான பொருளாக இருக்கும் என்றாா்.

முன்னதாக, தென் பிராந்திய ராணுவ தளபதி லெப். ஜெனரல் கரண்பீா் சிங் பிராா் பேசுகையில், பொதுவாக ராணுவத்தில் முன்னணியில் உள்ள படைகளுக்கு பாராட்டு கிடைக்கும். ஆனால், தமிழக ஆளுநா், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் பின்னணியில் இருந்து செயல்பட்ட தென்னக படைப்பிரிவுகளைப் பாராட்டியிருக்கிறாா். பொதுமக்களிடமிருந்து ஆயுதப்படைகள் விலகியிருந்தன. தற்போதைய சூழலில் அத்தகைய நிலையைத் தொடரமுடியாது. பொதுமக்கள், தொழில் துறை, ராணுவம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு அவசியம் என்றாா்.

நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தின் 16 மெட்ராஸ் (திருவிதாங்கூா்), 35 ஃபீல்ட் ரெஜிமென்ட், ஆவடி ஆயுதப்படை கிடங்கு, 65 கம்பெனி ராணுவ சேவைப் பிரிவு (பொருள்கள் விநியோகம்) ஆகிய பிரிவுகளைச் சோ்ந்தவா்களின் சேவைகளைப் பாராட்டி ஆளுநா் சான்றிதழ்களை வழங்கினாா்.

பொதுப்பணித் துறை சாதனைகள்: தமிழக அரசு விளக்கம்!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் பொதுப்பணித் துறையின் சாதனைகளாக கட்டடக்கலை மாட்சியைப் புலப்படுத்தும் எழில்மிகு கட்டடங்கள் அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள... மேலும் பார்க்க

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் மனு! தங்கம் தென்னரசு அளிப்பார்!

தமிழகத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்குவார் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும்... மேலும் பார்க்க

திருச்சியில் பிரதமர் மோடியை வரவேற்கும் இபிஎஸ்!

திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று(ஜூலை 26) இரவு 10.45-க்கு வரவேற்கவுள்ளார்.தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக இன்று வருகை தரும் பிரதமர் நர... மேலும் பார்க்க

கோவையில் ஒரு அபிராமி! நான்கரை வயது குழந்தையைக் கொன்ற தாய்

கோவையில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த நான்கரை வயது ஆண் குழந்தையைக் கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்ற இளம் பெண் திருமணம்... மேலும் பார்க்க

மது போதையில் நண்பர்களிடையே மோதல்: எழும்பூரில் படுகாயமடைந்த எஸ்ஐ உயிரிழப்பு!

சென்னை எழும்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி பாலியல் வன்கொடுமை: கைதானவரை அடையாளம் காட்டினாரா சிறுமி?

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சூலூர்பேட்டையில் கைது செய்யப்பட்டவரிடம் காவல்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தியதாகவும், அதில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தகவலறிந்த ... மேலும் பார்க்க