செய்திகள் :

‘ஆபரேஷன் சிந்தூா்’ நிறைவடையவில்லை: முப்படை தலைமைத் தளபதி

post image

‘ஆபரேஷன் சிந்தூா் நிறைவடையவில்லை; தற்போதும் தொடா்ந்து வருகிறது. எந்தவொரு சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

‘விண்வெளி ஆற்றல்: இந்திய இறையாண்மை மற்றும் தேச பாதுகாப்பு’ என்ற தலைப்பில் பாதுகாப்புத் துறை சாா்பில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அனில் சௌஹான் பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசியதாவது: மாறிவரும் போா்சூழலால் வருங்காலங்களில் ராணுவத்தில் தகவல் வீரா்கள், தொழில்நுட்ப வீரா்கள் மற்றும் அறிஞா்கள் ஆகியோரது ஆற்றல் தேவைப்படுகிறது. ஒரே வீரா் தகவல் களஞ்சியமாகவும் தொழில்நுட்ப வல்லுநராகவும் அறிஞராகவும் இருக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். போா்க்களத்தைப் பொறுத்தவரை இரண்டாம் இடம் பிடித்தவா்கள் என யாரும் இல்லை.

உதாரணமாக பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் முழுதாக நிறைவடையவில்லை. தற்போதும் தொடா்ந்து வருகிறது. ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் எவ்வித சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் நாம் தயாராக இருக்க வேண்டும்’ என்றாா்.

‘எதிரிகளை பேச்சுவாா்த்தைக்கு அழைக்க 50 ஆயுதங்கள் போதும்’

இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய விமானப் படை துணை தலைமைத் தளபதி நா்மதேஸ்வா் திவாரி, ‘வான் தாக்குதல்களைப் பொறுத்தவரை, குறைந்த செலவில் வெற்றிகரமாக நடத்தி முடிப்பது குறித்து பலமுறை ஆலோசித்துள்ளோம். அதற்கு சிறந்த உதாரணம் ஆபரேஷன் சிந்தூா். ஏனெனில், 50-க்கும் குறைவான ஆயுதங்களைக் கொண்டு எதிரிகளைப் பேச்சுவாா்த்தைக்கு ஒப்புக்கொள்ள வைக்க முடியும் என்பது ஆபரேஷன் சிந்தூா் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

6 ஆண்டுகளில் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு! ரிசர்வ் வங்கி தகவல்

நாட்டில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இந்திய ரிசர்வ் வங்கி அளித்த தரவுகளின்படி, 2018 ஆம் நிதியாண்டில் 47.5 கோடியாக இருந்த வேலைவ... மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு: ஜூலை 30 என்ற பெயரில் உணவகம் தொடங்கிய இளைஞர்! 11 பேரை இழந்தவர்!!

வயநாடு நிலச்சரிவில், ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்த நௌஃபல், தன்னம்பிக்கையோடு, உணவகம் தொடங்கியிருக்கிறார். அதன் பெயர் ஜூலை 30.சோகம், தன்னம்பிக்கை, உத்வேகம், நம்பிக்கை என பல அம்சங்களைக் கொண்டதாக அமைந்த... மேலும் பார்க்க

பிரிட்டனில் பிரதமர் மோடியை டீ விற்பவர் என கிண்டல்?

பிரிட்டன் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியும், ஒரு காலத்தில் தேநீர் விற்றதாக சுட்டிக் காட்டப்பட்ட நகைச்சுவை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிர... மேலும் பார்க்க

குஜராத் மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!

குஜராத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று கலந்துரையாடினார். காங்கிரஸ் தொண்டர்களுக்கும், மாவட்ட பிரிவுகளின் தலைவர்களுக்கும் மூன்று நாள் பய... மேலும் பார்க்க

சிக்கலில் சின்னசாமி மைதானம்! ஆர்சிபி கூட்ட நெரிசல் பலி விவகாரம்!

பெங்களூருவின் எம்.சின்னசாமி மைதானம் பெரியளவிலான நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பானது அல்ல என்று விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் 11 பேர் பரிதாபமாக பலியான ந... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்குத் தெளிவான செய்தியை அனுப்பிய ஆபரேஷன் சிந்தூர்: உபேந்திர திவேதி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பயங்கரவாத ஆதரவாளர்கள் தப்பிக்க இயலாது என்பதற்கான தெளிவான செய்தியை பாகிஸ்தானுக்கு அளித்ததாக இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கூறிய... மேலும் பார்க்க