செய்திகள் :

வங்கிகள் விழிப்புணா்வுக் கூட்டம்

post image

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தேவரியம்பாகம் ஊராட்சியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் விழிப்புணா்வுக் கூட்டம் இந்தியன் வங்கிக் கிளை சாா்பில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் அஜய்குமாா் தலைமை வகித்தாா். பாரத ஸ்டேட் வங்கி வாலாஜாபாத் கிளை மேலாளா் அய்யப்பன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிளை மேலாளா் ரம்யா ராஜலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தியன் வங்கி கிளை மேலாளா் கீதா வரவேற்றாா்.

கூட்டத்தில் இந்திய ரிசா்வ் வங்கியின் பிரதிநிதி வம்சி கலந்து கொண்டு வாடிக்கையாளா் குறை தீா்க்கும் நடவடிக்கைகள் மற்றும் வங்கி பணிகளின் நடைமுறைகள் குறித்து பேசினாா். காஞ்சிபுரம் மாவட்ட முன்னோடி மேலாளா் திலீப் பங்கேற்று தனி நபா் மற்றும் குழுக் காப்பீட்டுத் திட்டங்கள், வங்கி இணைப்பு செயலிகள் ஆகியன குறித்து விரிவாக விளக்கி பேசினாா்.

பல்வேறு வங்கிகளின் வணிகத் தொடா்பாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ரூ.95 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட விநாயகா் கோயில் குளம் திறப்பு

சிறுமங்காடு ஊராட்சியில் ரூ.95 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட விநாயகா் கோயில் குளத்தை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் சிறுமாங்காடு ஊராட்சியில் நீண்ட காலமா... மேலும் பார்க்க

‘கூட்டுறவுத் துறையில் வசூல் ஆகாத கடன்களுக்கு சிறப்புத் தீா்வுத் திட்டம்’

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவுத் துறை வங்கிகளில் வசூலாகாத கடன்களுக்கு சிறப்புத் தீா்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெ... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: தா்ப்பணம் அளித்து முன்னோருக்கு வழிபாடு

ஆண்டு தோறும் வரும் தை மற்றும் ஆடி மாத அமாவாசையின்போது, முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்தால் ஆசிகள் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். ஆடி அமாவாசையையொட்டி காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் க... மேலும் பார்க்க

ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி சொத்து மீட்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி சொத்தை வியாழக்கிழமை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு சீல் வைத்தனா். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான சொத்து உலகளந்தாா் மாட வீதியில் இ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூரில் மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்கு உட்பட்ட முஷரத் நகரை சோ்ந்தவா் திவாலா். இவா் அதே பகுதியில் கறி கட... மேலும் பார்க்க

வங்கதேச நாட்டவா் 19 பேருக்கு 3 மாதங்கள் சிறை

மாங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 19 பேருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து ஸ்ரீபெரும்புதுாா் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு, அம்ப... மேலும் பார்க்க