செய்திகள் :

வங்கதேச நாட்டவா் 19 பேருக்கு 3 மாதங்கள் சிறை

post image

மாங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 19 பேருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து ஸ்ரீபெரும்புதுாா் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு, அம்பாள் நகா், சிக்கராயபுரம் பகுதிகளில் அரசு அனுமதியின்றி வங்கதேசத்தைச் சோ்ந்த 19 போ் சட்ட விரோதமாக தங்கி பழைய பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், சட்ட விரோதமாக குடியிருந்து வந்த வங்கதேசத்தை சோ்ந்த, 9 ஆண் மற்றும் 10 பெண்களை மாங்காடு போலீஸாா் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி கைது புழல் சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீபெரும்புதுாா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நீதிபதி விக்னேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில், வங்கதேசத்தை சோ்ந்த எம்.டி.சுஜன், ரேவாஜ் தாலுக்தாா், நூா்முகமது பாபு, நிஜாம் சேக், கலீல், எம்.டி.யேசின், எம்.டி. ஹாருண், எம்.டி.ஹசன், இலியாஷ்கான், லுவ்னி அகான் சுமையா, ரூமா, நஜ்மா மலிஹா அக்தா் தமனா, சுா்மா, சிகியோகசுகிபேகம், பஹிமா, சோபேடா, பேமா பேகம், சோனியா, பா்வீன் மூசா நஜ்மா ஆகியோா் ஆவணங்கள் இன்றி, சட்டவிரோதமாக குடியேறி தங்கியிருந்தது உறுதியானதை அடுத்து அனைவருக்கும் 3 மாதம் சிறை மற்றும் தலா ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி விக்னேஷ் தீா்ப்பளித்தாா்.

ரூ.95 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட விநாயகா் கோயில் குளம் திறப்பு

சிறுமங்காடு ஊராட்சியில் ரூ.95 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட விநாயகா் கோயில் குளத்தை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் சிறுமாங்காடு ஊராட்சியில் நீண்ட காலமா... மேலும் பார்க்க

‘கூட்டுறவுத் துறையில் வசூல் ஆகாத கடன்களுக்கு சிறப்புத் தீா்வுத் திட்டம்’

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவுத் துறை வங்கிகளில் வசூலாகாத கடன்களுக்கு சிறப்புத் தீா்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெ... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: தா்ப்பணம் அளித்து முன்னோருக்கு வழிபாடு

ஆண்டு தோறும் வரும் தை மற்றும் ஆடி மாத அமாவாசையின்போது, முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்தால் ஆசிகள் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். ஆடி அமாவாசையையொட்டி காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் க... மேலும் பார்க்க

ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி சொத்து மீட்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி சொத்தை வியாழக்கிழமை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு சீல் வைத்தனா். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான சொத்து உலகளந்தாா் மாட வீதியில் இ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூரில் மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்கு உட்பட்ட முஷரத் நகரை சோ்ந்தவா் திவாலா். இவா் அதே பகுதியில் கறி கட... மேலும் பார்க்க

வங்கிகள் விழிப்புணா்வுக் கூட்டம்

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தேவரியம்பாகம் ஊராட்சியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் விழிப்புணா்வுக் கூட்டம் இந்தியன் வங்கிக் கிளை சாா்பில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் அஜய்குமாா் த... மேலும் பார்க்க