செய்திகள் :

மின்னணுத் துறையில் சீன முதலீடு: இணக்கமாக செயல்பட அரசு முடிவு

post image

மின்னணுத் துறையில் இந்திய நிறுவனங்களில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு உள்ள கட்டுப்பாடுகளைத் தளா்த்தி இணக்கத்துடன் செயல்பட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இது தொடா்பாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

சா்வதேச அளவில் மின்னணு சாதன உற்பத்தியில் 60 சதவீதம் சீன தயாரிப்புகளே உள்ளன. இத்துறையில் சீன நிறுவனங்கள் தவிா்க்க முடியாததாக உருவெடுத்துள்ளன. எனவே, சீன நிறுவனங்களுடன் இந்திய நிறுவனங்கள் கைகோத்து செயல்படுவது மிகவும் அவசியமாக உள்ளது.

சீனா்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சுற்றுலா விசா தடையை மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீக்கியது. இப்போது அடுத்தகட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பிரச்னை, பல்வேறு விவகாரங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்படுவது போன்றவை இந்திய-சீன உறவில் நெருடலான விஷயங்களாக உள்ளன. அதே நேரத்தில் ஆசிய பிராந்தியத்தில் மக்கள்தொகை அளவிலும், பொருளாதார அளவிலும் சீனாவும், இந்தியாவும் வலுவான நாடுகளாக உள்ளன. எனவே, சீனாவுடன் பொருளாதார ஒத்துழைப்பு என்பது தவிா்க்க முடியாததாகி வருகிறது.

மிகப்பெரிய மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான டிக்ஸன் டெக்னாலஜிஸ் சீனாவின் லாங்சியா் நிறுவனத்துடனான ஒப்பந்தத்துக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதியளித்தது. இதுதவிர வேறு சில சீன நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படவுள்ளது.

சீன நிறுவனங்களுடன் இணைந்து அறிதிறன்பேசி, மடிக்கணினி ஆகியவற்றுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்ய இருக்கிறது. சீனாவின் விவோ அறிதிறன்பேசி தயாரிப்பு நிறுவனத்துடனும் டிக்ஸன் டெக்னாலஜிஸ் ஒப்பந்தம் மேற்கொள்ளத் திட்டமிட்டுவருகிறது.

வயநாடு நிலச்சரிவு: ஜூலை 30 என்ற பெயரில் உணவகம் தொடங்கிய இளைஞர்! 11 பேரை இழந்தவர்!!

வயநாடு நிலச்சரிவில், ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்த நௌஃபல், தன்னம்பிக்கையோடு, உணவகம் தொடங்கியிருக்கிறார். அதன் பெயர் ஜூலை 30.சோகம், தன்னம்பிக்கை, உத்வேகம், நம்பிக்கை என பல அம்சங்களைக் கொண்டதாக அமைந்த... மேலும் பார்க்க

பிரிட்டனில் பிரதமர் மோடியை டீ விற்பவர் என கிண்டல்?

பிரிட்டன் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியும், ஒரு காலத்தில் தேநீர் விற்றதாக சுட்டிக் காட்டப்பட்ட நகைச்சுவை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிர... மேலும் பார்க்க

குஜராத் மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!

குஜராத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று கலந்துரையாடினார். காங்கிரஸ் தொண்டர்களுக்கும், மாவட்ட பிரிவுகளின் தலைவர்களுக்கும் மூன்று நாள் பய... மேலும் பார்க்க

சிக்கலில் சின்னசாமி மைதானம்! ஆர்சிபி கூட்ட நெரிசல் பலி விவகாரம்!

பெங்களூருவின் எம்.சின்னசாமி மைதானம் பெரியளவிலான நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பானது அல்ல என்று விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் 11 பேர் பரிதாபமாக பலியான ந... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்குத் தெளிவான செய்தியை அனுப்பிய ஆபரேஷன் சிந்தூர்: உபேந்திர திவேதி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பயங்கரவாத ஆதரவாளர்கள் தப்பிக்க இயலாது என்பதற்கான தெளிவான செய்தியை பாகிஸ்தானுக்கு அளித்ததாக இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கூறிய... மேலும் பார்க்க

உலகளவில் பெரும் மதிப்புடைய தலைவர்கள்! பிரதமர் மோடி முதலிடம்!

உலகின் அதி நம்பிக்கையான தலைவர்கள் குறித்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.உலகளவில் அதி நம்பிக்கையான மற்றும் பெரும் மதிப்புடைய தலைவர்களின் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொ... மேலும் பார்க்க