செய்திகள் :

ஆக.9 முதல் வைகோ பிரசார பயணம்

post image

மதிமுக பொதுச் செயலா் வைகோ தூத்துக்குடியில் தொடங்கி சென்னை வரை 8 இடங்களில், ஆக.9 முதல் ஆக.19 வரை பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

இதுகுறித்து மதிமுக தலைமை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காக்கவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் மதிமுக பொதுச்செயலா் வைகோ சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா். அதன்படி, தூத்துக்குடியில் வருகிற ஆக.9-ஆம் தேதி பிரசாரப் பயணத்தை தொடங்கும் வைகோ அங்கு ‘ஸ்டொ்லைட் வெளியேற்றம்’ என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளாா்.

அதைத்தொடா்ந்து ஆக.10-இல் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ‘மதச்சாா்பின்மையும், கூட்டாட்சியும்’ என்ற தலைப்பிலும், ஆக.11-இல் தேனி மாவட்டம் கம்பத்தில் ‘முல்லை பெரியாறும், நியூட்ரினோவும்’ என்ற தலைப்பிலும், ஆக.12-இல் திண்டுக்கல்லில் ‘விவசாயிகள், மீனவா்கள் துயரம்’ என்ற தலைப்பிலும் உரையாற்றவுள்ளாா்.

ஆக.13-ஆம் தேதி தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தில் ‘மேக்கேதாட்டுவும் மீத்தேனும்’ என்ற தலைப்பிலும், ஆக.14-இல்

கடலூா் மாவட்டம் நெய்வேலியில் ‘நெய்வேலி நிலக்கரி நிறுவனம்’ குறித்தும் பேசுகிறாா்.

பின்னா் 3 நாள்கள் ஓய்வுக்குப் பிறகு, ஆக.18-ஆம் தேதி திருப்பூரில் ‘ஹிந்தி ஏகாதிபத்தியம்’ என்ற தலைப்பில், ஆக.19 -இல் சென்னை திருவான்மியூரில் ‘சமூக நீதியும், திராவிட இயக்கமும்’ என்ற தலைப்பில் உரையாற்றி, தனது பிரசார பயணத்தை வைகோ நிறைவுசெய்கிறாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவைக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு தாண்டி அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நில... மேலும் பார்க்க

பருவ காலங்களை கணிக்கும் செயற்கைக்கோள்: ஜூலை 30ல் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர்

மழைக்காலம் மற்றும் பருவ காலங்களில் மேகமூட்டங்கள் எவ்வளவு இருந்தாலும் அதில் இருக்கக்கூடிய விஷயங்களை தெளிவாக புகைப்படம் எடுக்க உதவும் புதிய செயற்கைக்கோள், ஜூலை 30 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ... மேலும் பார்க்க

பொதுப்பணித் துறை சாதனைகள்: தமிழக அரசு விளக்கம்!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் பொதுப்பணித் துறையின் சாதனைகளாக கட்டடக்கலை மாட்சியைப் புலப்படுத்தும் எழில்மிகு கட்டடங்கள் அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள... மேலும் பார்க்க

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் மனு! தங்கம் தென்னரசு அளிப்பார்!

தமிழகத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்குவார் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும்... மேலும் பார்க்க

திருச்சியில் பிரதமர் மோடியை வரவேற்கும் இபிஎஸ்!

திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று(ஜூலை 26) இரவு 10.45-க்கு வரவேற்கவுள்ளார்.தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக இன்று வருகை தரும் பிரதமர் நர... மேலும் பார்க்க

கோவையில் ஒரு அபிராமி! நான்கரை வயது குழந்தையைக் கொன்ற தாய்

கோவையில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த நான்கரை வயது ஆண் குழந்தையைக் கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்ற இளம் பெண் திருமணம்... மேலும் பார்க்க