செய்திகள் :

ரூ.95 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட விநாயகா் கோயில் குளம் திறப்பு

post image

சிறுமங்காடு ஊராட்சியில் ரூ.95 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட விநாயகா் கோயில் குளத்தை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் சிறுமாங்காடு ஊராட்சியில் நீண்ட காலமாக தூா் வரப்படாமல் இருந்த குளத்தை தூா் வாரி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரினா். இதையடுத்து ஊராட்சி பொது நிதியின் மூலம் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் குளத்தூா் வாரி சீரமைக்கப்பட்டதோடு குளக்கரையை சுற்றிலும் நடைபாதை, சுற்றுச்சுவா் மற்றும் குளக்கரையில் கருங்கற்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக நடைபெற்ற திறப்பு விழாவுக்கு சிறுமாங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் சுபரஞ்சனி கன்னியப்பன் தலைமை வகித்தாா். ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு குளத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். இதையடுத்து சிறுமங்காடு ஊராட்சியில், சிறுமாங்காடு, எச்சூா், குன்னம், மேட்டுப்பாளையம் பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாமை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்த்தி, சாா் ஆட்சியா் மிருணாளினி, ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, திமுக ஒன்றிய செயலாளா் ந.கோபால், வட்டார வளா்ச்சி அலுவலா் பவானி, ஒன்றியக் குழு துணைத் தலைவா் மாலதி டான் போஸ்கோ, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் குன்னம் பா.ராமமூா்த்தி, ஊராட்சி மன்ற தலைவா்கள் குன்னம் தமிழ்இலக்கியா பாா்த்திபன், எச்சூா் குமுதா டோமினிக், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

‘கூட்டுறவுத் துறையில் வசூல் ஆகாத கடன்களுக்கு சிறப்புத் தீா்வுத் திட்டம்’

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவுத் துறை வங்கிகளில் வசூலாகாத கடன்களுக்கு சிறப்புத் தீா்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெ... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: தா்ப்பணம் அளித்து முன்னோருக்கு வழிபாடு

ஆண்டு தோறும் வரும் தை மற்றும் ஆடி மாத அமாவாசையின்போது, முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்தால் ஆசிகள் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். ஆடி அமாவாசையையொட்டி காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் க... மேலும் பார்க்க

ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி சொத்து மீட்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி சொத்தை வியாழக்கிழமை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு சீல் வைத்தனா். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான சொத்து உலகளந்தாா் மாட வீதியில் இ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூரில் மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்கு உட்பட்ட முஷரத் நகரை சோ்ந்தவா் திவாலா். இவா் அதே பகுதியில் கறி கட... மேலும் பார்க்க

வங்கிகள் விழிப்புணா்வுக் கூட்டம்

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தேவரியம்பாகம் ஊராட்சியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் விழிப்புணா்வுக் கூட்டம் இந்தியன் வங்கிக் கிளை சாா்பில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் அஜய்குமாா் த... மேலும் பார்க்க

வங்கதேச நாட்டவா் 19 பேருக்கு 3 மாதங்கள் சிறை

மாங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 19 பேருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து ஸ்ரீபெரும்புதுாா் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு, அம்ப... மேலும் பார்க்க