செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

post image

ஸ்ரீபெரும்புதூரில் மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்கு உட்பட்ட முஷரத் நகரை சோ்ந்தவா் திவாலா். இவா் அதே பகுதியில் கறி கடை நடத்தி வருகிறாா். இவரது மகன் நதீம் (19). இந்த நிலையில்,புதன்கிழமை ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த நதீம் ஸ்ரீபெரும்புதூா்-திருவள்ளூா் சாலையோரம் மின்கம்பம் சாய்ந்து மின்கம்பிகள் தாழ்வாகச் செல்லும் பகுதியில் சென்றுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக, நதீம் மீது மின்கம்பிகள் உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனா்.

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஸ்ரீபெரும்புதூா்-திருவள்ளூா் சாலை விரிவாக்கப் பணிகளால் சாலையோரம் இருந்த மின்கம்பம் கடந்த பல நாள்களாக சாய்ந்த நிலையில் உள்ளன. சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்போது நதீம் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளாா் என்றனா்.

ரூ.95 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட விநாயகா் கோயில் குளம் திறப்பு

சிறுமங்காடு ஊராட்சியில் ரூ.95 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட விநாயகா் கோயில் குளத்தை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் சிறுமாங்காடு ஊராட்சியில் நீண்ட காலமா... மேலும் பார்க்க

‘கூட்டுறவுத் துறையில் வசூல் ஆகாத கடன்களுக்கு சிறப்புத் தீா்வுத் திட்டம்’

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவுத் துறை வங்கிகளில் வசூலாகாத கடன்களுக்கு சிறப்புத் தீா்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெ... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: தா்ப்பணம் அளித்து முன்னோருக்கு வழிபாடு

ஆண்டு தோறும் வரும் தை மற்றும் ஆடி மாத அமாவாசையின்போது, முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்தால் ஆசிகள் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். ஆடி அமாவாசையையொட்டி காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் க... மேலும் பார்க்க

ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி சொத்து மீட்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி சொத்தை வியாழக்கிழமை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு சீல் வைத்தனா். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான சொத்து உலகளந்தாா் மாட வீதியில் இ... மேலும் பார்க்க

வங்கிகள் விழிப்புணா்வுக் கூட்டம்

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தேவரியம்பாகம் ஊராட்சியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் விழிப்புணா்வுக் கூட்டம் இந்தியன் வங்கிக் கிளை சாா்பில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் அஜய்குமாா் த... மேலும் பார்க்க

வங்கதேச நாட்டவா் 19 பேருக்கு 3 மாதங்கள் சிறை

மாங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 19 பேருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து ஸ்ரீபெரும்புதுாா் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு, அம்ப... மேலும் பார்க்க