செய்திகள் :

யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்துகள் முடக்கம்

post image

யூகோ வங்கி முன்னாள் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் (சிஎம்டி) சுபோத் குமாா், அவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது.

மேற்கு வங்கி மாநிலம் கொல்கத்தாவில் டிஎம்டி கம்பிகளை விநியோகிக்கும் கோன்காஸ்ட் ஸ்டீல் மற்றும் பவா் நிறுவனம் (சிஎஸ்பிஎல்) உள்ளது.

இந்நிலையில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சிஎஸ்பிஎல் நிறுவனம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை ரூ.6,210 கோடி அளவுக்கு மோசடி செய்தது தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது.

அந்த நிறுவனத்துக்கு ரூ.1,460 கோடிக்கும் அதிகமாக கடன் அளிக்க ஒப்புதல் அளித்ததில் முக்கிய பங்கு வகித்ததற்காக, கடந்த மே மாதம் யூகோ வங்கியின் முன்னாள் சிஎம்டி சுபோத்குமாா் கோயல் கைது செய்யப்பட்டாா். அந்தக் கடன் பின்னா் வாராக் கடனான நிலையில், கடன் வழங்க ஒப்புதல் அளித்ததற்குப் பிரதிபலனாக பணம், அசையா சொத்துகளை சுபோத்குமாா் சட்டவிரோதமாக பெற்றாா். இது ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக சுபோத்குமாா் கோயல், அவரின் குடும்ப உறுப்பினா்கள் உள்ளிட்டோருக்கு எதிராக கொல்கத்தாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் துணை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் சுபோத் குமாா் மற்றும் இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட பிற நிறுவனங்களுக்குச் சொந்தமான சுமாா் ரூ.106.36 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது கொல்கத்தா சிறையில் நீதிமன்ற காவலில் சுபோத்குமாா் அடைக்கப்பட்டுள்ளாா்.

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்ட 17 எம்.பி.க்களுக்கு விருது!

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது 2025 வழங்கி கௌரவிக்கப்படவிருக்கிறது.சன்சத் ரத்னா விருது 2025-க்கு தேர்வானவர்கள்: சுப்ரியா சுலேரவி கிஷன்நிஷிகாந்த் து... மேலும் பார்க்க

அவைத் தலைவரிடம் முதல் கோரிக்கை வைத்து திட்டு வாங்கியதைப் பகிர்ந்த கிரண் ரிஜிஜு

புது தில்லி: நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தான் முதன் முதலில், அவைத் தலைவரை சந்தித்தபோது வைத்தக் கோரிக்கையும் அதனால் அவரிடம் திட்டு வாங்கியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.தான் அரசியலில் ... மேலும் பார்க்க

மன அழுத்தத்தை ஏற்படுத்திய கல்லூரி நிர்வாகம்: உதய்பூரில் பல் மருத்துவ மாணவி தற்கொலை!

உதய்பூர் அருகேயுள்ள டெபாரியில் பல் மருத்துவம் பயிலும் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை காவலரின் ஒரே மகள் ஸ்வேதா சிங்(25). இவர் ... மேலும் பார்க்க

ஊர்க்காவல்படைத் தேர்வின்போது மயங்கிய பெண்! ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை!!

பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில், ஊர்க்காவல் படைத் தேர்வின்போது மயங்கி விழுந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸில் ஏற்றியபோது, அங்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் எ... மேலும் பார்க்க

6 ஆண்டுகளில் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு! ரிசர்வ் வங்கி தகவல்

நாட்டில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இந்திய ரிசர்வ் வங்கி அளித்த தரவுகளின்படி, 2018 ஆம் நிதியாண்டில் 47.5 கோடியாக இருந்த வேலைவ... மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு: ஜூலை 30 என்ற பெயரில் உணவகம் தொடங்கிய இளைஞர்! 11 பேரை இழந்தவர்!!

வயநாடு நிலச்சரிவில், ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்த நௌஃபல், தன்னம்பிக்கையோடு, உணவகம் தொடங்கியிருக்கிறார். அதன் பெயர் ஜூலை 30.சோகம், தன்னம்பிக்கை, உத்வேகம், நம்பிக்கை என பல அம்சங்களைக் கொண்டதாக அமைந்த... மேலும் பார்க்க