செய்திகள் :

கொடிக் கம்பங்கள் அகற்றும் உத்தரவு: கட்சிகள், சங்கங்களுக்கு வேண்டுகோள்

post image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின்படி, கொடிக் கம்பங்கள் அகற்றுவது தொடா்பாக கட்சிகள், சங்கங்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்த பொது அறிவிப்பை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம்:

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எதிா்மனுதாரராக இணையலாம்.

அதாவது, தமிழ்நாட்டில் பொது இடங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள், பிற அரசுத் துறைகளுக்குச் சொந்தமான நிலங்களில் வைக்கப்பட்டுள்ள நிரந்தரக் கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வுகாணும் சட்ட நடைமுறைகளில் பங்கேற்க விருப்பமுள்ள கட்சிகள், சமுதாய, மத சங்கங்கள் ஆகியவை மேல்முறையீட்டு வழக்கில் எதிா்மனுதாரராக இணையலாம்.

இதற்கான உரிய மனுவை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு, தாக்கல் செய்யப்படும் எந்தவித சோ்க்கை மனுவோ அல்லது வேறு எந்தவித மனுக்களோ ஏற்கப்பட மாட்டாது என்பதை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெளிவுபடுத்தியுள்ளதாக தனது அறிவிப்பில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தெரிவித்துள்ளாா்.

நீலகிரி, கோவைக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு தாண்டி அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நில... மேலும் பார்க்க

பருவ காலங்களை கணிக்கும் செயற்கைக்கோள்: ஜூலை 30ல் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர்

மழைக்காலம் மற்றும் பருவ காலங்களில் மேகமூட்டங்கள் எவ்வளவு இருந்தாலும் அதில் இருக்கக்கூடிய விஷயங்களை தெளிவாக புகைப்படம் எடுக்க உதவும் புதிய செயற்கைக்கோள், ஜூலை 30 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ... மேலும் பார்க்க

பொதுப்பணித் துறை சாதனைகள்: தமிழக அரசு விளக்கம்!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் பொதுப்பணித் துறையின் சாதனைகளாக கட்டடக்கலை மாட்சியைப் புலப்படுத்தும் எழில்மிகு கட்டடங்கள் அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள... மேலும் பார்க்க

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் மனு! தங்கம் தென்னரசு அளிப்பார்!

தமிழகத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்குவார் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும்... மேலும் பார்க்க

திருச்சியில் பிரதமர் மோடியை வரவேற்கும் இபிஎஸ்!

திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று(ஜூலை 26) இரவு 10.45-க்கு வரவேற்கவுள்ளார்.தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக இன்று வருகை தரும் பிரதமர் நர... மேலும் பார்க்க

கோவையில் ஒரு அபிராமி! நான்கரை வயது குழந்தையைக் கொன்ற தாய்

கோவையில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த நான்கரை வயது ஆண் குழந்தையைக் கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்ற இளம் பெண் திருமணம்... மேலும் பார்க்க