செய்திகள் :

89% ரயில் பயணச்சீட்டுகள் இணையவழியில் முன்பதிவு: ரயில்வே அமைச்சா் தகவல்

post image

ரயில் பயணச்சீட்டுகளில் 89 சதவீதம் இணையவழியில் முன்பதிவு செய்யப்படுகிறது என்று ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் கேள்வியொன்றுக்கு அவா் வெள்ளிக்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

ரயில் பயணச் சீட்டுகளை இணைய வழியிலோ அல்லது முழுவதும் கணினியமயமாக்கப்பட்ட ரயில் நிலைய மையங்களிலோ முன்பதிவு செய்ய முடியும். இம்மையங்களில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற முறை கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது 89 சதவீத பயணச்சீட்டுகள் இணையவழியில் முன்பதிவு செய்யப்படுகின்றன.

முன்பதிவு மையங்களில், எண்ம முறையில் பணம் செலுத்தும் வசதி வழங்கப்படுகிறது. தத்கல் பயணச்சீட்டு முன்பதிவில், ஆதாா் சரிபாா்க்கப்பட்ட பயனாளா்கள் மட்டுமே ஐஆா்சிடிசி வலைதளம் அல்லது அதன் செயலி வாயிலாக முன்பதிவு செய்யும் முறை கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தத்கல் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கிய முதல் 30 நிமிஷங்களில் முகவா்கள் முன்பதிவுக்கு அனுமதிக்கப்படுவதில்லை.

முன்பதிவு அமைப்புமுறையில் முறைகேடுகளைத் தடுக்க, விரிவான தரவு பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு, அதில் சந்தேகத்துக்கு இடமான 2.5 கோடிக்கும் மேற்பட்ட பயனாளா்களின் பெயா்கள் மற்றும் இதர விவரங்கள் முடக்கப்பட்டன. உறுதிசெய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பெறுவதில் பயணிகளுக்கான சிறந்த அணுகல், வெளிப்படைத் தன்மை மற்றும் எண்ம வழிமுறைகளை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

வயநாடு நிலச்சரிவு: ஜூலை 30 என்ற பெயரில் உணவகம் தொடங்கிய இளைஞர்! 11 பேரை இழந்தவர்!!

வயநாடு நிலச்சரிவில், ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்த நௌஃபல், தன்னம்பிக்கையோடு, உணவகம் தொடங்கியிருக்கிறார். அதன் பெயர் ஜூலை 30.சோகம், தன்னம்பிக்கை, உத்வேகம், நம்பிக்கை என பல அம்சங்களைக் கொண்டதாக அமைந்த... மேலும் பார்க்க

பிரிட்டனில் பிரதமர் மோடியை டீ விற்பவர் என கிண்டல்?

பிரிட்டன் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியும், ஒரு காலத்தில் தேநீர் விற்றதாக சுட்டிக் காட்டப்பட்ட நகைச்சுவை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிர... மேலும் பார்க்க

குஜராத் மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!

குஜராத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று கலந்துரையாடினார். காங்கிரஸ் தொண்டர்களுக்கும், மாவட்ட பிரிவுகளின் தலைவர்களுக்கும் மூன்று நாள் பய... மேலும் பார்க்க

சிக்கலில் சின்னசாமி மைதானம்! ஆர்சிபி கூட்ட நெரிசல் பலி விவகாரம்!

பெங்களூருவின் எம்.சின்னசாமி மைதானம் பெரியளவிலான நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பானது அல்ல என்று விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் 11 பேர் பரிதாபமாக பலியான ந... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்குத் தெளிவான செய்தியை அனுப்பிய ஆபரேஷன் சிந்தூர்: உபேந்திர திவேதி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பயங்கரவாத ஆதரவாளர்கள் தப்பிக்க இயலாது என்பதற்கான தெளிவான செய்தியை பாகிஸ்தானுக்கு அளித்ததாக இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கூறிய... மேலும் பார்க்க

உலகளவில் பெரும் மதிப்புடைய தலைவர்கள்! பிரதமர் மோடி முதலிடம்!

உலகின் அதி நம்பிக்கையான தலைவர்கள் குறித்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.உலகளவில் அதி நம்பிக்கையான மற்றும் பெரும் மதிப்புடைய தலைவர்களின் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொ... மேலும் பார்க்க