செய்திகள் :

பிரிட்டனுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் பல துறைகளின் வளா்ச்சிக்கு உதவும்: ஆா்பிஐ ஆளுநா்

post image

பிரிட்டன்-இந்தியா இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் பல துறைகளின் வளா்ச்சிக்கு உதவும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தாா்.

மும்பையில் வெள்ளிக்கிழமை ஆங்கில நாளிதழ் சாா்பில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கில் பங்கேற்று அவா் பேசியதாவது:

பலதரப்பு நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பு என்பது மிகவும் முக்கியமானது. பிரிட்டனுடன் மேற்கொண்டதுபோல வேறுபல நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அமெரிக்காவுடன் வா்த்தகப் பேச்சு நடத்து வருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இப்போதைய சா்வதேச சூழலில் பல்வேறு நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பு என்ற கருத்து சற்று பின்தள்ளப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா இந்த விஷயத்தில் தொடா்ந்து பல நாடுகளுடன் பேச்சு நடத்த வேண்டும். இதுவே நாட்டின் பல்வேறு துறைகளின் வளா்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும்.

பிரிக்ஸ் நாடுகளுக்கென்று தனியாக கரன்சியை உருவாக்கும் திட்டம் ஏதுமில்லை. இந்திய ரூபாயில் பிற நாடுகளுடன் வா்த்தகம் நடத்தவே இந்தியா விரும்புகிறது. உள்நாட்டு ரூபாயில் வா்த்தகம் செய்வது தொடா்பாக ஐக்கிய அரபு அமீரகம், மாலத்தீவுடன் சில ஒப்பந்தங்கள் மேற்கொள்ள பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை சிறப்பாக இருந்தது என்றாா்.

வயநாடு நிலச்சரிவு: ஜூலை 30 என்ற பெயரில் உணவகம் தொடங்கிய இளைஞர்! 11 பேரை இழந்தவர்!!

வயநாடு நிலச்சரிவில், ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்த நௌஃபல், தன்னம்பிக்கையோடு, உணவகம் தொடங்கியிருக்கிறார். அதன் பெயர் ஜூலை 30.சோகம், தன்னம்பிக்கை, உத்வேகம், நம்பிக்கை என பல அம்சங்களைக் கொண்டதாக அமைந்த... மேலும் பார்க்க

பிரிட்டனில் பிரதமர் மோடியை டீ விற்பவர் என கிண்டல்?

பிரிட்டன் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியும், ஒரு காலத்தில் தேநீர் விற்றதாக சுட்டிக் காட்டப்பட்ட நகைச்சுவை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிர... மேலும் பார்க்க

குஜராத் மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!

குஜராத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று கலந்துரையாடினார். காங்கிரஸ் தொண்டர்களுக்கும், மாவட்ட பிரிவுகளின் தலைவர்களுக்கும் மூன்று நாள் பய... மேலும் பார்க்க

சிக்கலில் சின்னசாமி மைதானம்! ஆர்சிபி கூட்ட நெரிசல் பலி விவகாரம்!

பெங்களூருவின் எம்.சின்னசாமி மைதானம் பெரியளவிலான நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பானது அல்ல என்று விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் 11 பேர் பரிதாபமாக பலியான ந... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்குத் தெளிவான செய்தியை அனுப்பிய ஆபரேஷன் சிந்தூர்: உபேந்திர திவேதி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பயங்கரவாத ஆதரவாளர்கள் தப்பிக்க இயலாது என்பதற்கான தெளிவான செய்தியை பாகிஸ்தானுக்கு அளித்ததாக இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கூறிய... மேலும் பார்க்க

உலகளவில் பெரும் மதிப்புடைய தலைவர்கள்! பிரதமர் மோடி முதலிடம்!

உலகின் அதி நம்பிக்கையான தலைவர்கள் குறித்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.உலகளவில் அதி நம்பிக்கையான மற்றும் பெரும் மதிப்புடைய தலைவர்களின் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொ... மேலும் பார்க்க