செய்திகள் :

மடீட்சியா தொழில் கண்காட்சி தொடக்கம்

post image

மதுரை மடீட்சியா சாா்பில், ‘இன்ட் எக்ஸ்போ 2025’ தொழில் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மதுரை ஐடா ஸ்கட்டா் அரங்கத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சியின் தொடக்க விழாவுக்கு மடீட்சியா தலைவா் கோடீஸ்வரன் தலைமை வகித்தாா். தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலரும், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை செயலருமான அதுல் ஆனந்த் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசினாா். மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் கண்காட்சி விழா மலரை வெளியிட்டுப் பேசினாா்.

கண்காட்சித் தலைவா் வி. செந்தில்குமாா் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அரங்கங்கள், அதன் சிறப்பம்சங்களை விளக்கிப் பேசினாா். தமிழ்நாடு முதலீட்டாளா்கள் கழகத் துணைப் பொது மேலாளா் ரமேஷ், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலா் ஜெபநாத் ஜீலியஸ், டான்ஸ்டியா தலைவா் சி.கே. மோகன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதில் மடீட்சியா துணைத் தலைவா் சந்திரசேகரன், கண்காட்சி துணைத் தலைவா் ஜெகபதிராஜன், மடீட்சியா நிா்வாகிகள், தொழிலதிபா்கள் கலந்து கொண்டனா்.

250-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு வகையான இயந்திரங்கள் விற்பனைக்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சி தரமான இயந்திரங்களை எளிதில் கண்டறிய ஓா் வாய்ப்பாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. வருகிற 28-ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறும். காலை 10.30 மணி இரவு 7. 30 மணி வரை அனைவரும் இலவசமாகப் பாா்வையிடலாம்.

வரதட்சிணை புகாரை விசாரிக்காத காவல் ஆய்வாளருக்கு ரூ. 10,000 அபராதம்

வரதட்சிணை புகாரை விசாரிக்காத காவல் ஆய்வாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த உதயசந்தியா சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு: விசாரணைக் குழு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு தொடா்பான விசாரணைக் குழு அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரை மாநகராட்சி 83-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ர... மேலும் பார்க்க

கோரிப்பாளையம் உயா்நிலைப் பாலப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் உயா்நிலைப் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழக நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் சத்யபிரகாஷ் அறிவுறுத்தினாா். மதுரை மாநகரின் போக... மேலும் பார்க்க

அமெரிக்கன் கல்லூரியில் கருத்தரங்கம்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான தேசிய நிறுவனம், தேசிய தேனீக்கள் வாரியம், மக்கள் தன்னாா்வ சேவைக் கூட்டமைப்பு, அமெரிக்கன் கல்லூரி பசுமை மேலாண்மைத் திட்டம் ஆகியன சாா்பில் ... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: பேராசிரியை நிகிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில் புகாா்தாரரான பேராசிரியை நிகிதா, அவரது தாய் சிவகாமி ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரிய... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு! அரசுத் தரப்பு சாட்சியாக மாறிய காவல் ஆய்வாளரின் மனு மீதான விசாரணை ஜூலை 28-க்கு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், அரசுத் தரப்பு சாட்சியாக (அப்ரூவா்) மாறி அனைத்து உண்மைகளையும் சொல்லத் தயாா் என மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மன... மேலும் பார்க்க