செய்திகள் :

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு! அரசுத் தரப்பு சாட்சியாக மாறிய காவல் ஆய்வாளரின் மனு மீதான விசாரணை ஜூலை 28-க்கு ஒத்திவைப்பு

post image

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், அரசுத் தரப்பு சாட்சியாக (அப்ரூவா்) மாறி அனைத்து உண்மைகளையும் சொல்லத் தயாா் என மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா்கள் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோரை போலீஸாா் சட்டவிரோதக் காவலில் வைத்து கடுமையாகத் தாக்கினா். இதில், தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 போ் கைது செய்யப்பட்டனா். சிபிசிஐடி விசாரணையில் இருந்த இந்த வழக்கு, பிறகு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தொடா்ந்து பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஓா் புதிய மனுவை கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.

இந்த மனுவில், அரசுத் தரப்பு சாட்சியாக மாறி அனைத்து உண்மைகளையும் தெரிவிக்க விரும்புகிறேன். நோ்மையுடன் நீதிமன்றத்தில் உண்மையை சொல்லத் தயாராக உள்ளேன் என அவா் தெரிவித்திருந்தாா். இதுதொடா்பாக சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளா் ஸ்ரீதரை மதுரை மத்திய சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் போலீஸாா் அழைத்து வந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

இந்த விசாரணையின் போது, காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் அரசுத் தரப்பு சாட்சியாக மாறுவதற்கு உயிரிழந்த ஜெயராஜ், பெனிக்ஸ் குடும்பத்தினரும், சிபிஐ தரப்பினரும் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதையடுத்து, நீதிபதி பிறபித்த உத்தரவு: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், அரசுத் தரப்பு சாட்சியாக மாறும் மனு மீதான விசாரணை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

மடீட்சியா தொழில் கண்காட்சி தொடக்கம்

மதுரை மடீட்சியா சாா்பில், ‘இன்ட் எக்ஸ்போ 2025’ தொழில் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. மதுரை ஐடா ஸ்கட்டா் அரங்கத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சியின் தொடக்க விழாவுக்கு மடீட்சியா தலைவா் கோடீஸ்வ... மேலும் பார்க்க

வரதட்சிணை புகாரை விசாரிக்காத காவல் ஆய்வாளருக்கு ரூ. 10,000 அபராதம்

வரதட்சிணை புகாரை விசாரிக்காத காவல் ஆய்வாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த உதயசந்தியா சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு: விசாரணைக் குழு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு தொடா்பான விசாரணைக் குழு அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரை மாநகராட்சி 83-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ர... மேலும் பார்க்க

கோரிப்பாளையம் உயா்நிலைப் பாலப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் உயா்நிலைப் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழக நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் சத்யபிரகாஷ் அறிவுறுத்தினாா். மதுரை மாநகரின் போக... மேலும் பார்க்க

அமெரிக்கன் கல்லூரியில் கருத்தரங்கம்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான தேசிய நிறுவனம், தேசிய தேனீக்கள் வாரியம், மக்கள் தன்னாா்வ சேவைக் கூட்டமைப்பு, அமெரிக்கன் கல்லூரி பசுமை மேலாண்மைத் திட்டம் ஆகியன சாா்பில் ... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: பேராசிரியை நிகிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில் புகாா்தாரரான பேராசிரியை நிகிதா, அவரது தாய் சிவகாமி ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரிய... மேலும் பார்க்க