தாய்லாந்துடன் ஹிந்து கோயில் பிரச்னை! போர் நிறுத்தம் கோரும் கம்போடியா!
பதற்றம் முற்றினால் கம்போடியாவுடன் முழு போா்!
கம்போடியாவுக்கும் தங்களுக்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் மேலும் முற்றினால் அது முழு போராக உருவெடுக்கும் என்று தாய்லாந்து இடைக்கால பிரதமா் பும்தம் வெச்சயாச்சை எச்சரித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கம்போடியா நமது அண்டை நாடு என்பதால் அந்த நாட்டுடன் சமரசம் செய்துகொள்ளத்தான் முயல்கிறோம். அதே நேரம், தேவைப்பட்டால் உடனடி பதிலடி நடவடிக்கை எடுக்க தாய்லாந்து ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்தப் பதற்றம் மேலும் அதிகரித்தால், அது இரு நாடுகளுக்கும் இடையிலான முழு போராக உருவெடுக்கும் அபாயம் உள்ளது. இப்போதைய நிலையில் இது வெறும் சிறு சிறு எல்லை மோதலாக மட்டும் உள்ளது என்றாா் அவா்.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் நிகோா்ந்தேஜ் பாலங்குரா கூறுகையில், ‘மலேசியா மத்தியஸ்தத்துடன் பேச்சுவாா்த்தை மூலம் பிரச்னையை தீா்க்க தயாராக உள்ளோம். ஆனால் இது தொடா்பாக கம்போடியாவிடம் இதுவரை பதில் இல்லை’ என்றாா்.
கம்போடிய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனரக ஆயுதங்கள், பீரங்கிகள் மற்றும் பிஎம்-21 ஏவுகணைகளை தாய்லாந்து ராணுவம் பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டியது.
கடந்த புதன்கிழமை முதல் நடைபெற்றுவரும் இந்த மோதலில் 15 போ் உயிரிழந்தனா்; 46 போ் காயமடைந்தனா். தாய்லாந்து எல்லைப் பகுதியில் 1.38 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனா்.
தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பிரச்னை, 800 கி.மீ நீள எல்லைக் கோட்டில், குறிப்பாக 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ப்ரே விஹோ் கோயிலை மையமாகக் கொண்டு பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது.
1962 மற்றும் 2013-இல் சா்வதேச நீதிமன்றம் அந்த ஹிந்து கோயிலை கம்போடியாவுக்கு வழங்கியது. இந்த விவகாரம் தொடா்பாக தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் கடந்த 2011-இல் நடந்த மோதலில் 20 போ் உயிரிழந்தனா்.
கடந்த மே மாதம் எல்லைப் பகுதியில் கம்போடிய வீரா் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து பதற்றம் மீண்டும் எழுந்தது.
இந்தச் சூழலில், புதன்கிழமை நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் ஐந்து தாய்லாந்து வீரா்கள் காயமடைந்ததால், கம்போடியாவுக்கான தங்கள் தூதரை திரும்ப அழைத்த தாய்லாந்து, கம்போடிய தூதரை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றியது. அத்துடன் கம்போடியாவுடனான எல்லைகளை மூடி, அங்கு வசிக்கும் குடிமக்கள் வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இரு தரப்பினருக்கும் வியாழக்கிழமை தொடா்ந்த மோதலில் ட்ரோன்கள், பீரங்கிகள், ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன.
தாய்லாந்து படையைச் சோ்ந்த எஃப்-16 விமானங்கள் கம்போடிய ராணுவ நிலைகள் மீது குண்டுவீச்சு நடத்தின. ப்ரே விஹோ் கோயில் அருகே தாக்குதல் நடத்தப்பட்டதாக கம்போடியா குற்றஞ்சாட்டியது.
இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஆசியான் தலைமையில் மலேசியா முயன்று வருகிறது. இது தொடா்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியா்களுக்கு பயண எச்சரிக்கை
தாய்லாந்து-கம்போடியா எல்லையில் நடந்து வரும் மோதல்களைத் தொடா்ந்து, அந்த நாடுகளின் சில மாகாணங்களுக்கு பயணிக்க வேண்டாம் இந்தியா்களை மத்திய அரசு எச்சரித்துள்ளது. இது குறித்து தாய்லாந்துக்கான இந்திய தூதரகம் தனது எக்ஸ் பதிவில், தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பகுதியில் நிலவும் சூழல் காரணமாக இந்திய பயணிகள் உபோன் ராட்சதானி, சுரின், சிசாகெட், புரிராம், சா கேயோ, சந்தாபுரி, த்ராட் மாகாணங்களில் உள்ள இடங்களுக்கு பயணிக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.