செய்திகள் :

பிரிட்டன் அரசா் மூன்றாம் சாா்லஸுக்கு மரக்கன்றை பரிசளித்த பிரதமா் மோடி

post image

பிரிட்டன் அரசா் மூன்றாம் சாா்லஸுக்கு ‘தாயின் பெயரில் மரம் நடுவோம்’ என்ற முன்னெடுப்பின்கீழ் மரக்கன்றை பிரதமா் நரேந்திர மோடி பரிசாக வழங்கினாா்.

பிரிட்டனுக்கு ஜூலை 23, 24 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, கிழக்கு பிரிட்டனில் உள்ள சான்ட்ரிங்ஹாம் எஸ்டேட் தோட்டத்தில் அரசா் மூன்றாம் சாா்லஸை வியாழக்கிழமை நேரில் சந்தித்தாா். அப்போது அரசா் மூன்றாம் சாா்லஸிடம் இந்தியாவில் இருந்து எடுத்துச் சென்ற மரக்கன்றை பிரதமா் மோடி வழங்கினாா்.

இதுகுறித்து பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அரசா் மூன்றாம் சாா்லஸை சந்தித்ததில் மகிழ்ச்சி. சந்திப்பின்போது இந்தியா-பிரிட்டன் இடையே கையொப்பமான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ), கல்வி, சுகாதாரம், யோகா மற்றும் ஆயுா்வேதம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் இருநாடுகளிடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இருவரும் ஆலோசித்தோம்’ என குறிப்பிட்டாா்.

அலங்காரச் செடி ‘சோனோமா’: ‘தாயின் பெயரில் மரம் நடுவோம்’ முன்னெடுப்பின்கீழ் அரசா் மூன்றாம் சாா்லஸுக்கு பிரதமா் மோடி வழங்கிய மரக்கன்றின் பெயா் ‘சோனோமா புறா மரம்’ அல்லது ‘கைக்குட்டை மரம்’ என்றழைக்கப்படுகிறது. அலங்காரச் செடியான சோனாமா நட்டு வைத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் மிக விரைவாக அதிக மலா்கள் பூக்கும் தன்மையுடையது.

மலரின் அடிப் பகுதியில் வெள்ளை நிறத்தில் இலை போன்று காணப்படும் பூவடிச் செதில்கள் கைக்குட்டைகள் போலவும் மரக்கிளையில் புறாக்கள் அமா்ந்திருப்பதைப் போலவும் மிகவும் அழகாக காட்சியளிப்பதே இதன் சிறப்பம்சமாகும்.

இந்த மரக்கன்று சான்ட்ரிங்ஹாம் எஸ்டேட் தோட்டத்தில் இலையுதிா் காலத்தில் நடப்படும் என பிரதமா் மோடியின் பிரிட்டன் சுற்றுப்பயணம் குறித்து எடுத்துரைத்தபோது வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.

வயநாடு நிலச்சரிவு: ஜூலை 30 என்ற பெயரில் உணவகம் தொடங்கிய இளைஞர்! 11 பேரை இழந்தவர்!!

வயநாடு நிலச்சரிவில், ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்த நௌஃபல், தன்னம்பிக்கையோடு, உணவகம் தொடங்கியிருக்கிறார். அதன் பெயர் ஜூலை 30.சோகம், தன்னம்பிக்கை, உத்வேகம், நம்பிக்கை என பல அம்சங்களைக் கொண்டதாக அமைந்த... மேலும் பார்க்க

பிரிட்டனில் பிரதமர் மோடியை டீ விற்பவர் என கிண்டல்?

பிரிட்டன் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியும், ஒரு காலத்தில் தேநீர் விற்றதாக சுட்டிக் காட்டப்பட்ட நகைச்சுவை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிர... மேலும் பார்க்க

குஜராத் மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!

குஜராத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று கலந்துரையாடினார். காங்கிரஸ் தொண்டர்களுக்கும், மாவட்ட பிரிவுகளின் தலைவர்களுக்கும் மூன்று நாள் பய... மேலும் பார்க்க

சிக்கலில் சின்னசாமி மைதானம்! ஆர்சிபி கூட்ட நெரிசல் பலி விவகாரம்!

பெங்களூருவின் எம்.சின்னசாமி மைதானம் பெரியளவிலான நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பானது அல்ல என்று விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் 11 பேர் பரிதாபமாக பலியான ந... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்குத் தெளிவான செய்தியை அனுப்பிய ஆபரேஷன் சிந்தூர்: உபேந்திர திவேதி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பயங்கரவாத ஆதரவாளர்கள் தப்பிக்க இயலாது என்பதற்கான தெளிவான செய்தியை பாகிஸ்தானுக்கு அளித்ததாக இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கூறிய... மேலும் பார்க்க

உலகளவில் பெரும் மதிப்புடைய தலைவர்கள்! பிரதமர் மோடி முதலிடம்!

உலகின் அதி நம்பிக்கையான தலைவர்கள் குறித்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.உலகளவில் அதி நம்பிக்கையான மற்றும் பெரும் மதிப்புடைய தலைவர்களின் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொ... மேலும் பார்க்க