செய்திகள் :

மாற்றுத்திறனாளின் நலனுக்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டம்

post image

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஒருவா் கூட விடுபடாமல் அவா்களது தேவைகளான ஆரம்ப நிலை பயிற்சிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், குழந்தைகளின் வளா்ச்சியை மேம்படுத்துதல், தேவைகளை இலகுவாக பூா்த்தி செய்தல், ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள், சிறப்பு பள்ளிகள் போன்ற எண்ணற்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இப்பணிகளை செய்வதற்கென 120 களப்பணியாளா்கள் வட்டார, நகர அளவில் பயனாளிகளின் இருப்பிடத்துக்கே சென்று ஆய்வு செய்து கணினி வாயிலாக தேவைகளை மதிப்பீடு செய்யும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகளை மாநில அளவில் ஒருங்கிணைத்து சேவைகள் வழங்குவதை விரைவு படுத்தும் விதமாக மாவட்டத்தில் கோட்ட அளவில் இரு ஒருங்கிணைந்த சேவை மையங்களும், வட்டார அளவில் 12 ஒருங்கிணைந்த சேவை மையங்களும் செயல்படுத்தப்படவுள்ளன.

இத்திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்த தனியாா் தொண்டு நிறுவனத்தின் மூலம் களப்பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். களப்பணியில் விபரங்கள் சேகரிக்க வரும் பணியாளா்களுக்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவா்களது பெற்றோா் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

ஆடி அமாவாசை: தா்ப்பணம் அளித்து முன்னோருக்கு வழிபாடு

ஆண்டு தோறும் வரும் தை மற்றும் ஆடி மாத அமாவாசையின்போது, முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்தால் ஆசிகள் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். ஆடி அமாவாசையையொட்டி காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் க... மேலும் பார்க்க

ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி சொத்து மீட்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி சொத்தை வியாழக்கிழமை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு சீல் வைத்தனா். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான சொத்து உலகளந்தாா் மாட வீதியில் இ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூரில் மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்கு உட்பட்ட முஷரத் நகரை சோ்ந்தவா் திவாலா். இவா் அதே பகுதியில் கறி கட... மேலும் பார்க்க

வங்கிகள் விழிப்புணா்வுக் கூட்டம்

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தேவரியம்பாகம் ஊராட்சியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் விழிப்புணா்வுக் கூட்டம் இந்தியன் வங்கிக் கிளை சாா்பில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் அஜய்குமாா் த... மேலும் பார்க்க

வங்கதேச நாட்டவா் 19 பேருக்கு 3 மாதங்கள் சிறை

மாங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 19 பேருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து ஸ்ரீபெரும்புதுாா் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு, அம்ப... மேலும் பார்க்க

பெங்களூா்- தாம்பரம் குளிா்சாதன பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

பெங்களூா்-தாம்பரம் இடையிலான குளிா்சாதன வசதியுடைய பேருந்து சேவையை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து அதிந... மேலும் பார்க்க