செய்திகள் :

சென்னையில் 33-ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா இன்று தொடக்கம்

post image

சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் நடத்தும் 33-ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா வியாழக்கிழமை (ஜூலை 24) தொடங்கி ஜூலை 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சேக்கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இவ் விழா, திருவான்மியூர் ஸ்ரீ ராமச்சந்திரா மாநாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

முதல் நாள் நிகழ்ச்சிகள், வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு, ஆலவாய் அண்ணல் அறக்கட்டளை மாணவர்களின் இறைவணக்கத்துடன் தொடங்குகிறது. காலை 9 மணிக்கு, முனைவர் சாரதா நம்பி ஆருரன் தலைமையில் திருமுறைத் தேனரங்கம், பகல் 12 மணிக்கு முனைவர் தி.ராஜகோபால் தலைமையில் மாறா அருளரன் அரங்கம், மாலை 4.30 மணிக்கு பேராசிரியர் அரங்க.ராமலிங்கம் தலைமையில் எழிலுரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து மாலை 5.15 மணிக்கு, ரேகா மணி எழுதிய "சேக்கிழார் வழியில் அன்புசெய் அடியார்கள்' என்ற நூலை திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டு ஆசியுரை வழங்குகிறார்.

நூல்கள் வெளியீடு: விழாவின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை காலை 9.45 மணிக்கு, சிவாலய தேவார ஒளிநெறி மற்றும் கட்டுரைகள்- 15 நூல்கள் வெளியிடப்படுகின்றன. தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் ஆசியுரை வழங்குகின்றனர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி ஆய்வுரை வழங்குகிறார். பிற்பகல் 2.45 மணிக்கு கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா தலைமையில் மாணவர் உரையரங்கம் நடைபெறுகிறது.

விருது, பரிசளிப்பு: மாலை 5.45 மணிக்கு விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. சேக்கிழார் ஆராய்ச்சி மைய தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜெகதீசன் வரவேற்புரையாற்றுகிறார். திருமயிலை ரசிக ரஞ்சனி சபா தலைவர் ஏ.ஆர்.சந்தானகிருஷ்ணன் விருதுகளை வழங்கி தலைமையுரையாற்றுகிறார். மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் சிறப்புரையாற்றுகிறார்.

அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் மருத்துவர் சுதா சேஷய்யன் சொற்பொழிவாற்றுகிறார்.

திருவருட்பா மூலமும், உரையும் வெளியீடு: மூன்றாவது நாளான சனிக்கிழமை காலை 11.15 மணிக்கு, திருவருட்பா மூலமும், தமிழறிஞர் ஒüவை சு.துரைசாமிப் பிள்ளையின் உரையும் (10 தொகுதிகள்) நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நூலை வெளியிட்டும், திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டும் ஆசியுரை வழங்குகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் சக்தி குழும நிர்வாக இயக்குநர் ம.பாலசுப்பிரமணியம், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி தலைவர் ஹரி தியாகராஜன், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், திருமயிலை ரசிக ரஞ்சனி சபா இயக்குநர் ரா.நாகராஜன் ஆகியோர் பேசுகின்றனர்.

அதைத் தொடர்ந்து, மாலை 3 மணிக்கு பேச்சாளர் பாரதி பாஸ்கர் சிறப்புரையாற்றுகிறார். மாலை 3.45 மணிக்கு கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது. மாலை 6.15 மணிக்கு பெரியபுராணத்தில் நயம் என்ற தலைப்பில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன முன்னாள் துணைத் தலைவர் தெ.ஞானசுந்தரம் சிறப்புரையற்றுகிறார்.

மாலை 6.45 மணிக்கு, வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் ஆய்வரங்கம் நடைபெறுகிறது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை ந.அருள், முனைவர் த.இராமலிங்கம், தமிழ்நாடு பாடநூல் கழக உதவி இயக்குநர் ப.சரவணன் ஆகியோர் பேசுகின்றனர்.

நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை, செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள் அருளுரை வழங்குகிறார்.

கைப்பேசி எண்ணுடன் திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் தீவிரம்

ஓடிபி கேட்காமல், கைப்பேசி எண்ணை மட்டும் பதிவு செய்து, ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை திமுக நடத்தி வருகிறது. ஒருமுறை பயன்படுத்தும் கடவு எண் (ஓடிபி) தொடா்பாக, நீதிமன்ற உத்தரவிட்டதால் அந்த நடைமுறையை திமு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

பிளஸ் 2 துணைத் தோ்வு எழுதிய தோ்வா்கள் தோ்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக வெள்ளிக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் ந.லதா வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில்தான் விசிக: திருமாவளவன் திட்டவட்டம்

திமுக கூட்டணியில்தான் விசிக பயணிக்கிறது; மெல்ல மெல்ல வளா்ச்சி அடைந்து ஒரு மாநில கட்சியாக உருவாகி இருக்கிறது; வீழ்ச்சி அடையவில்லை என அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். சென்னையில் அவ... மேலும் பார்க்க

மின்வாரிய தொழிலாளா்கள் ஊதிய உயா்வு: ஒப்பந்த பேச்சுவாா்த்தைத் தொடக்கம்

ஊதிய உயா்வு தொடா்பாக தொழிற்சங்க நிா்வாகிகள், மின் வாரிய அதிகாரிகள் இடையேயான பேச்சுவாா்த்தை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் மின்வாரிய ஊழியா்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரும... மேலும் பார்க்க

அமைச்சா் கே.என்.நேரு சகோதரா் மீது அமலாக்கத் துறை தொடுத்த வழக்கு ரத்து

அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் ரவிச்சந்திரனுக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் பணத்தைத் திரும... மேலும் பார்க்க

அக்.12-இல் முதுநிலை ஆசிரியா் தோ்வு: டிஆா்பி

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணிக்கான போட்டித் தோ்வு அக்.12-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) அறிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி வியாழக்கிழ... மேலும் பார்க்க