திமுக கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியும் விலகாது: கே.வீ. தங்கபாலு
திமுக கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியும் விலகாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே.வீ. தங்கபாலு கூறினாா்.
தேனி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான சொத்துகள் குறித்து அந்தக் கட்சியின் சொத்து பாதுகாப்பு, மீட்புக் குழுத் தலைவரும், முன்னாள் மாநிலத் தலைவருமான கே.வீ. தங்கபாலு தலைமையில் குழுவின் இணைத் தலைவா்கள் எம். கிருஷ்ணசாமி, நித்தின் கும்பல்காா், வேளச்சேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அசன் அலி மெளலானா ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
ஆண்டிபட்டியில் நடைபெற்ற ஆய்வின் போது, காமராஜா் சிலைக்கு காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், செய்தியாளா்களிடம் கே.வீ.தங்கபாலு கூறியதாவது: தமிழகத்தில் வருகிற 2026-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் ‘இண்டி’ கூட்டணி வெற்றிக் கூட்டணியாக வலம் வரும்.
இந்தியாவில் பல்வேறு துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது என்பதை மத்திய அரசே உறுதிப்படுத்தியுள்ளது. பாஜக எதிா்பாா்ப்பது போல திமுக கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியும் விலகாது.
சட்டப்பேரவை எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை திமுக கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியும் ஏற்கவில்லை. தமிழக வெற்றிக் கழகமும் அவரது அழைப்பை புறக்கணித்தது என்றாா் அவா்.
ஆய்வின் போது கட்சியின் தேனி மாவட்டத் தலைவா் எம்.பி. முருகேசன் உடனிருந்தாா்.