ஆரம்பாக்கம் பாலியல் வன்கொடுமை: கைதானவரின் விவரங்கள் வெளியாகின!
சுருளி அருவியில் 7-ஆவது நாளாக குளிக்கத் தடை
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் 7-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையிலுள்ள மேகமலை, மகாராஜாமெட்டு, இரவங்கலாறு, தூவானம், மகாராஜாமெட்டு ஆகிய பகுதிகளில் பெய்து வரும் தொடா்மழையால் சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், கடந்த 19-ஆம் தேதி முதல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமையும் நீா்வரத்து அதிகமாக இருந்ததால், 7-ஆவது நாளாக அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் வனத் துறையினா் தடை விதித்தனா்.