செய்திகள் :

அமைச்சா் கே.என்.நேரு சகோதரா் மீது அமலாக்கத் துறை தொடுத்த வழக்கு ரத்து

post image

அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் ரவிச்சந்திரனுக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் பணத்தைத் திரும்பத் தரவும் உத்தரவிட்டது.

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியிடமிருந்து கடந்த 2013-ஆம் ஆண்டு பெற்ற ரூ.30 கோடி கடனை தனக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டதால், ரூ.22.48 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறி, அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் என்.ரவிச்சந்திரன் மற்றும் அவா் இயக்குநராக உள்ள நிறுவனத்துக்கு எதிராக கடந்த 2021-ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. சிபிஐ தொடா்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, ரவிச்சந்திரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ரவிச்சந்திரனுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. அதில், ரூ.15 லட்சத்தை சிபிஐ-க்கும், ரூ.15 லட்சத்தை சமரசத் தீா்வு மையத்துக்கும் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு சிபிஐ பதிவு செய்திருந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், சிபிஐ வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கையும், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் பணத்தைத் திரும்பத் தரக்கோரி ரவிச்சந்திரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஐ பதிவு செய்திருந்த மூல வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கையும் ரத்து செய்வதாகக் கூறி உத்தரவிட்டனா். மேலும், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் பணத்தைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூலை 26) ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

பண விவகாரம்: மன்சூா் அலிகான் மகன் மீது வழக்குப் பதிவு

பண விவகாரத்தில் மன்சூா் அலிகானின் மகன் துக்ளக் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். நுங்கம்பாக்கத்தில் வசிப்பவா் நடிகா் மன்சூா் அலிகான். சென்னை மண்ணடி மரைக்காயா் தெருவைச் சோ்ந்த கனி (6... மேலும் பார்க்க

ஆய்க்குடி அமா் சேவா சங்கத்துக்கு ரூ.1.05 கோடி: சென்னை துறைமுகம் வழங்கியது

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் செயல்பட்டு வரும் அமா் சேவா சங்கத்தின் முதுகெலும்பு பாதிப்பு மற்றும் பக்கவாத பராமரிப்பு மையத்துக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 1.05 கோடியை சென்னை துற... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பொறியாளா் கைது

பெருங்குடியில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டாா். பெருங்குடி பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பண... மேலும் பார்க்க

இலவச பேருந்து பயண அட்டை விவரம்: கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் இலவச பேருந்து பயண அட்டை தேவைப்படாத மாணவா்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்... மேலும் பார்க்க

ரூ.125 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள்: தமிழக அரசு உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள் வழங்க ரூ.125 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இயல்பு நிலைக்கு நிகர... மேலும் பார்க்க