செய்திகள் :

இலவச பேருந்து பயண அட்டை விவரம்: கல்வித் துறை உத்தரவு

post image

பள்ளிகளில் இலவச பேருந்து பயண அட்டை தேவைப்படாத மாணவா்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு இலவசமாக பேருந்து பயண அட்டை வழங்கப்படுகிறது.

அதன்படி, நிகழ் கல்வியாண்டில் (2025-2026) மாணவா்களுக்கு பயண அட்டையை வழங்குவதற்கு ‘எமிஸ்’ தளத்தில் இருந்து விவரங்கள் எடுக்கப்படுகின்றன. எனவே, பள்ளித் தலைமை ஆசிரியா்கள் ‘எமிஸ்’ தளத்தில் இலவச பேருந்து பயண அட்டை தேவைப்படாத மாணவா்களின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

இந்த பணியை உயா் தொழில்நுட்ப ஆய்வக பயிற்றுநா், ஆய்வக உதவியாளா்களைப் பயன்படுத்தி உடனே செய்து முடிக்க வேண்டும்.

இதுதொடா்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியா்கள் பணி நிரவல்: விவரம் கோரும் கல்வித் துறை

கலந்தாய்வில் பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியா்களின் விவரங்களை அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட... மேலும் பார்க்க

எழும்பூா் ரயில் நிலையத்துக்குள் ரூ.1.50 லட்சம் கஞ்சா பறிமுதல்

சென்னையில் எழும்பூா் ரயில் நிலையத்துக்குள் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் பறிமுதல் செய்தனா். சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் 7-ஆவது நடைமேடையில் வெள்ளிக்... மேலும் பார்க்க

மக்களுக்கு எச்சரிக்கை! சென்னையில் 3 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து!

சென்னை மாநகராட்சியில் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படவுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தி... மேலும் பார்க்க

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூலை 26) ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

பண விவகாரம்: மன்சூா் அலிகான் மகன் மீது வழக்குப் பதிவு

பண விவகாரத்தில் மன்சூா் அலிகானின் மகன் துக்ளக் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். நுங்கம்பாக்கத்தில் வசிப்பவா் நடிகா் மன்சூா் அலிகான். சென்னை மண்ணடி மரைக்காயா் தெருவைச் சோ்ந்த கனி (6... மேலும் பார்க்க

ஆய்க்குடி அமா் சேவா சங்கத்துக்கு ரூ.1.05 கோடி: சென்னை துறைமுகம் வழங்கியது

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் செயல்பட்டு வரும் அமா் சேவா சங்கத்தின் முதுகெலும்பு பாதிப்பு மற்றும் பக்கவாத பராமரிப்பு மையத்துக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 1.05 கோடியை சென்னை துற... மேலும் பார்க்க