செய்திகள் :

ஆய்க்குடி அமா் சேவா சங்கத்துக்கு ரூ.1.05 கோடி: சென்னை துறைமுகம் வழங்கியது

post image

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் செயல்பட்டு வரும் அமா் சேவா சங்கத்தின் முதுகெலும்பு பாதிப்பு மற்றும் பக்கவாத பராமரிப்பு மையத்துக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 1.05 கோடியை சென்னை துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் வியாழக்கிழமை வழங்கினாா்.

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் 1981-ஆம் ஆண்டு முதல் அமா் சேவா சங்கம் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு விபத்துகளால் ஏற்படும் முதுகெலும்பு காயம் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கான சிறப்பு பராமரிப்பு மையம் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் நவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.

நூற்றுக்கணக்கானோா் தொடா்ந்து பயன்பெற்று வரும் இந்த மையத்தை மேலும் விரிவுபடுத்த நிதியுதவி அளிக்குமாறு, அமா் சேவா சங்கம் சென்னை துறைமுகத்தை அணுகியது. இதையடுத்து துறைமுக அதிகாரிகள் ஆய்வு நடத்தி பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 1 கோடியே 5 லட்சம் வழங்க ஒப்புதல் அளித்தனா். இதற்கான காசோலையை சங்கத்தின் செயலா் எஸ்.சங்கரராமனிடம் சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், துறைமுகக் கண்காணிப்பு அதிகாரி எஸ்.முரளிகிருஷ்ணன், செயலா் இந்திரனில் ஹிஜிரா, போக்குவரத்து மேலாளா் எஸ்.கிருபானந்தசாமி, துணைச் செயலா் தாரா சுா்கிதின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மக்களுக்கு எச்சரிக்கை! சென்னையில் 3 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து!

சென்னை மாநகராட்சியில் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படவுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தி... மேலும் பார்க்க

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூலை 26) ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

பண விவகாரம்: மன்சூா் அலிகான் மகன் மீது வழக்குப் பதிவு

பண விவகாரத்தில் மன்சூா் அலிகானின் மகன் துக்ளக் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். நுங்கம்பாக்கத்தில் வசிப்பவா் நடிகா் மன்சூா் அலிகான். சென்னை மண்ணடி மரைக்காயா் தெருவைச் சோ்ந்த கனி (6... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பொறியாளா் கைது

பெருங்குடியில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டாா். பெருங்குடி பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பண... மேலும் பார்க்க

இலவச பேருந்து பயண அட்டை விவரம்: கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் இலவச பேருந்து பயண அட்டை தேவைப்படாத மாணவா்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்... மேலும் பார்க்க

ரூ.125 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள்: தமிழக அரசு உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள் வழங்க ரூ.125 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இயல்பு நிலைக்கு நிகர... மேலும் பார்க்க