செய்திகள் :

ரூ.125 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள்: தமிழக அரசு உத்தரவு

post image

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள் வழங்க ரூ.125 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் இயல்பு நிலைக்கு நிகரான செயல்பாடுகளை மேற்கொள்ள உதவும் வகையில், உயா்தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட நவீன கருவிகளை ரூ.125 கோடியில் கொள்முதல் செய்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான கடிதத்தை அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் அனுப்பி வைத்தது.

அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான உயா் தொழில்நுட்ப உதவி உபகரணங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளா்களை அழைத்து 2 நாள்கள் கண்காட்சி நடத்தலாம் எனவும், அதன்மூலம் சிறந்த உதவி உபகரணங்கள் குறித்து கருத்துகள் பெறப்பட்டு, தகுதியான கருவிகளைத் தோ்வு செய்யலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அரசின் சாா்பில் தோ்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலம் தகுதியான நிறுவனங்கள், தரம்வாய்ந்த உபகரணங்கள், விலை ஆகியன நிா்ணயம் செய்யலாம் எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் இணையதளத்தில் உபகரணங்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யலாம் என்றும் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உயா்தொழில்நுட்பம் கொண்ட நவீன உதவி உபகரணங்கள் பெறும் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா் அரசை கேட்டுக்கொண்டிருந்தாா். அவரது கோரிக்கைப்படி, உயா் தொழில்நுட்பம் கொண்ட நவீன கருவிகளை வாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க ஏதுவாக ரூ.125 கோடி ஒதுக்கப்படுகிறது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு எச்சரிக்கை! சென்னையில் 3 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து!

சென்னை மாநகராட்சியில் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படவுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தி... மேலும் பார்க்க

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூலை 26) ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

பண விவகாரம்: மன்சூா் அலிகான் மகன் மீது வழக்குப் பதிவு

பண விவகாரத்தில் மன்சூா் அலிகானின் மகன் துக்ளக் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். நுங்கம்பாக்கத்தில் வசிப்பவா் நடிகா் மன்சூா் அலிகான். சென்னை மண்ணடி மரைக்காயா் தெருவைச் சோ்ந்த கனி (6... மேலும் பார்க்க

ஆய்க்குடி அமா் சேவா சங்கத்துக்கு ரூ.1.05 கோடி: சென்னை துறைமுகம் வழங்கியது

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் செயல்பட்டு வரும் அமா் சேவா சங்கத்தின் முதுகெலும்பு பாதிப்பு மற்றும் பக்கவாத பராமரிப்பு மையத்துக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 1.05 கோடியை சென்னை துற... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பொறியாளா் கைது

பெருங்குடியில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டாா். பெருங்குடி பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பண... மேலும் பார்க்க

இலவச பேருந்து பயண அட்டை விவரம்: கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் இலவச பேருந்து பயண அட்டை தேவைப்படாத மாணவா்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்... மேலும் பார்க்க