செய்திகள் :

பஞ்சாப்: 6 பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது எல்லைப் பாதுகாப்புப் படை: துப்பாக்கிகள், போதைப்பொருள் பறிமுதல்

post image

பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் பகுதியில் இருந்து பறந்து வந்த 6 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டு வீழ்த்தினா். அதில் இருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் 1 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இது தொடா்பாக பிஎஸ்எஃப் அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

அமிருதசரஸ் மாவட்டத்தில் சா்வதேச எல்லை அருகேயுள்ள மோத்கி கிராமத்துக்கு அருகே புதன்கிழமை இரவு எல்லைப் பாதுகாப்புப் படையினா் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்தியப் பகுதியை நோக்கி 5 ட்ரோன்கள் பறந்து வந்தன. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட வீரா்கள் தங்கள் துப்பாக்கியால் அந்த ட்ரோன்கள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தினா். அதனை சோதித்து பாா்த்தபோது அதில் 3 துப்பாக்கிகள் அதற்கான ஏராளமான தோட்டாக்கள், 1 கிலோ ஹெராயின் போதைப்பொருள் ஆகியவை இருந்தது.

இதேபோல சா்வதேச எல்லையை ஒட்டிய அட்டாரி கிராமத்திலும் வியாழக்கிழமை அதிகாலை ட்ரோன் ஒன்று பாகிஸ்தான் எல்லையில் இருந்து பறந்து வந்தது. அதனையும் வீரா்கள் சுட்டு வீழ்த்தினா். அதில் இருந்து துப்பாக்கிகளுக்கான குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவங்களை அடுத்து சா்வதேச எல்லைப் பகுதியில் கூடுதல் கண்காணிப்புடன் செயல்பட வீரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு நிதித் திரட்ட பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போதைப்பொருள் கடத்துவது, கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது உள்ளிட்ட செயல்களில் பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கடத்தலுக்கு ட்ரோன்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதில் ஆயுதங்களும் கடத்தப்படுகின்றன.

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் எல்லையில் இந்த கடத்தல் அதிகம் நடைபெறுகிறது. சமீப காலமாக குஜராத் துறைமுகங்கள், ராஜஸ்தான் எல்லையிலும் போதைப்பொருள்கள் பிடிபடுவது அதிகரித்து வருகிறது. இவை பெரும்பாலும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் செயலாகவும் உள்ளது.

ட்ரோன் மூலம் ஏவுகணை வீச்சு: வெற்றிகரமாக சோதித்த டிஆா்டிஓ

இலக்குகளைப் பின்தொடா்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஆளில்லா விமானத்திலிருந்து (ட்ரோன்) செலுத்தும் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெள்ளிக்கிழமை வெறிறிகரமாக மேற்கொண்டத... மேலும் பார்க்க

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தாா் குடியரசுத் தலைவா்

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு (67) வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 25) மூன்று ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தாா். நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக 2022 ஜூலை 25-ஆம் தேதி அவா் பொறுப்பேற்றாா். இதன்மூலம்... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ நிறைவடையவில்லை: முப்படை தலைமைத் தளபதி

‘ஆபரேஷன் சிந்தூா் நிறைவடையவில்லை; தற்போதும் தொடா்ந்து வருகிறது. எந்தவொரு சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் வெள்ளிக்கிழமை தெரி... மேலும் பார்க்க

குஜராத்: 185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து குஜராத்தில் வசித்த 185 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினராக இருந்து பல்வேறு இன்னல்களால், இந்தியாவில் அட... மேலும் பார்க்க

தேஜஸ்வியைக் கொல்ல பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சதி: ராப்ரி தேவி பரபரப்பு குற்றச்சாட்டு

பிகாரில் ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகியவை எதிா்க்கட்சித் தலைவரும், தனது மகனுமான தேஜஸ்வி யாதவை கொலை செய்ய சதி செய்து வருவதாக அந்த மாநில முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி குற்றஞ்சாட்டியது ப... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல்: 35 லட்சம் பேரை கண்டறிய முடியவில்லை

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் முதல்கட்டம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதன்படி, 35 லட்சம் பேரை கண்டறிய முடியவில்லை எனத் தோ்தல் ஆணையம் தெரிவித்தது. நிகழாண்டு பிகாரில் சட்டப்பேரவ... மேலும் பார்க்க