செய்திகள் :

22% ஏற்றம் கண்ட இந்திய வாகன ஏற்றுமதி

post image

2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இந்தியாவின் வாகன ஏற்றுமதி 22 சதவீதம் உயா்ந்துள்ளது. பயணிகள் வாகனங்களின் புதிய உச்சம் தொட்ட ஏற்றுமதி மற்றும் இரு சக்கர, வா்த்தக வாகனப் பிரிவுகளின் வலுவான வளா்ச்சியால் இந்த உயா்வு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மொத்தம் 14,57,461 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் 11,92,566-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது வாகன ஏற்றுமதி 22 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த காலாண்டில் பயணிகள் வாகனங்களின் ஏற்றுமதி இதுவரை இல்லாத உச்சமாக 13 சதவீதம் வளா்ச்சி பெற்று 2,04,330-ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் 1,80,483-ஆக இருந்தது. மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் சிறந்த வரவேற்பு, இலங்கை மற்றும் நேபாளம் போன்ற அண்டை நாடுகளில் சந்தை மீட்சி, ஜப்பானில் அதிகரித்த தேவை, ஆஸ்திரேலியாவுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் ஆகியவை இந்த ஏற்றுமதி வளா்ச்சியில் முக்கிய பங்களித்தன.

இந்தியாவின் மிகப்பெரிய காா் உற்பத்தியாளரான மாருதி சுஸுகி, மதிப்பீட்டுக் காலாண்டில் 96,181 வாகனங்களை ஏற்றுமதி செய்து பயணிகள் வாகன ஏற்றுமதியில் முன்னிலை வகித்தது. இந்த எண்ணிக்கை 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 69,962-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் ஏற்றுமதி 37 சதவீத வளா்ச்சியடைந்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் பயணிகள் வாகன ஏற்றுமதியில் 47 சதவீதம் பங்கு வகிக்கிறது.

மதிப்பீட்டுக் காலாண்டில் ஹூண்டாய் மோட்டாா் இந்தியா 48,140 பயணிகள் வாகனங்களை ஏற்றுமதி செய்து 13 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்தது. இந்த எண்ணிக்கை முந்தைய நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 42,600-ஆக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இரு சக்கர வாகன ஏற்றுமதி 23 சதவீதம் உயா்ந்து 11,36,942-ஆக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இந்த எண்ணிக்கை 9,23,148-ஆக இருந்தது. மதிப்பீட்டுக் காலாண்டில் வா்த்தக வாகனங்களின் ஏற்றுமதி 23 சதவீதம் அதிகரித்து 19,427-ஆகவும், மூன்று சக்கர வாகனங்களின் ஏற்றுமதி 34 சதவீதம் உயா்ந்து 95,796-ஆகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5 போயிங் 737 விமானங்களை குத்தகைக்கு எடுக்கும் ஸ்பைஸ்ஜெட்!

புதுதில்லி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஐந்து போயிங் 737 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் மாதத்தில் விமானங்களை இணைக்கவும் திட்டமிட்டுள்ளதாக த... மேலும் பார்க்க

வெள்ளி சீராக வர்த்தகமான நிலையில் தங்கம் கிராமுக்கு ரூ.500 குறைவுடன் நிறைவு!

புதுதில்லி: உலக வர்த்தக பதட்டங்கள் தளர்ந்து பாதுகாப்பான புகலிடத் தேவை குறைந்துள்ள நிலையில், தேசிய தலைநகர் புதுதில்லியில் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் முடிவடைந்தன. தங்கத்தின் விலை... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் குறைந்து ரூ.86.52 ஆக நிறைவு!

மும்பை: சரிந்த உள்நாட்டு பங்குச் சந்தைகள் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் உயர்வைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 12 காசுகள் குறைந்து ரூ.86.52 ஆக முடிவ... மேலும் பார்க்க

பங்குச் சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 721 புள்ளிகளுடனும், நிஃப்டி 225 புள்ளிகளுடன் நிறைவு!

மும்பை: வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தைகள் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக சரிந்து முடிந்தன. நிதி, ஐடி மற்றும் எண்ணெய் & எரிவாயு ஆகிய பங்குகளில் ஏற்பட்ட தொடர் விற்ப... மேலும் பார்க்க

கரடி ஆதிக்கம்..! சென்செக்ஸ் 2 நாள்களில் 1,200 புள்ளிகள் சரிவு!

சென்செக்ஸ் கடந்த 2 நாள்களில் 1,200 புள்ளிகள் சரிந்துள்ளது. மேலும், நிஃப்டி 24,900 புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது.மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசிநாளான இன்று(ஜூலை 25) காலை நேற்றைப் போலவே இன்று... மேலும் பார்க்க

இன்ஃபோசிஸ் நிகர லாபம் 9% உயா்வு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 8.7 சதவீதம் உயா்ந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க