செய்திகள் :

5 போயிங் 737 விமானங்களை குத்தகைக்கு எடுக்கும் ஸ்பைஸ்ஜெட்!

post image

புதுதில்லி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஐந்து போயிங் 737 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் மாதத்தில் விமானங்களை இணைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஐந்து போயிங் 737 விமானங்களைச் இணைப்பதற்கான குத்தகை ஒப்பந்தத்தை இறுதி செய்துவிட்டதாகவும், அவை அக்டோபரில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் குளிர்காலம் மற்றும் கோடைகாலத்தின் தொடக்கத்திற்கும் ஏற்றவாறு செயல்படும்.

அதே வேளையில் நிறுவனம் தனது விமானக் குழுவை மேலும் மேம்படுத்தவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சேவைகளை வலுப்படுத்தவும் மற்ற குத்தகைதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

பல சவால்களைச் சந்தித்து வந்த இந்த பட்ஜெட் விமான நிறுவனம், போயிங் 737 மற்றும் Q-400 விமானங்களை இயக்கி வருகிறது.

விமானக் குழு கண்காணிப்பு வலைத்தளமான Planespotters.net இல் கிடைத்த தரவுகளின் அடிப்படையில், ஜூலை 24 ஆம் தேதி நிலவரப்படி, விமான நிறுவனத்திடம் 20 விமானங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில் 33 விமானங்கள் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகள் 2.40 சதவிகிதம் சரிந்து ரூ.38.27 ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறக்கம்!

SpiceJet has finalised an agreement to lease five Boeing 737 planes

வெள்ளி சீராக வர்த்தகமான நிலையில் தங்கம் கிராமுக்கு ரூ.500 குறைவுடன் நிறைவு!

புதுதில்லி: உலக வர்த்தக பதட்டங்கள் தளர்ந்து பாதுகாப்பான புகலிடத் தேவை குறைந்துள்ள நிலையில், தேசிய தலைநகர் புதுதில்லியில் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் முடிவடைந்தன. தங்கத்தின் விலை... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் குறைந்து ரூ.86.52 ஆக நிறைவு!

மும்பை: சரிந்த உள்நாட்டு பங்குச் சந்தைகள் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் உயர்வைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 12 காசுகள் குறைந்து ரூ.86.52 ஆக முடிவ... மேலும் பார்க்க

பங்குச் சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 721 புள்ளிகளுடனும், நிஃப்டி 225 புள்ளிகளுடன் நிறைவு!

மும்பை: வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தைகள் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக சரிந்து முடிந்தன. நிதி, ஐடி மற்றும் எண்ணெய் & எரிவாயு ஆகிய பங்குகளில் ஏற்பட்ட தொடர் விற்ப... மேலும் பார்க்க

கரடி ஆதிக்கம்..! சென்செக்ஸ் 2 நாள்களில் 1,200 புள்ளிகள் சரிவு!

சென்செக்ஸ் கடந்த 2 நாள்களில் 1,200 புள்ளிகள் சரிந்துள்ளது. மேலும், நிஃப்டி 24,900 புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது.மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசிநாளான இன்று(ஜூலை 25) காலை நேற்றைப் போலவே இன்று... மேலும் பார்க்க

இன்ஃபோசிஸ் நிகர லாபம் 9% உயா்வு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 8.7 சதவீதம் உயா்ந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

இந்தியன் வங்கி வருவாய் ரூ.18,721 கோடியாக அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கியின் மொத்த வருவாய் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.18,721 கோடியாக அதிகரித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க