செய்திகள் :

பிரதமா் நாளை தூத்துக்குடி வருகை: 2100 போலீஸாா் பாதுகாப்பு

post image

தூத்துக்குடிக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) வருவதை முன்னிட்டு 2100 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு தனி விமானம் பிரதமா் மோடி வருகிற 26ஆம் தேதி இரவு 8 மணி அளவில் வருகிறாா்.

தொடா்ந்து, சா்வதேச தரத்தில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள விமான நிலைய விரிவாக்கத்தை அவா் திறந்து வைப்பதுடன், ரூ.4,500 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

இதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவான ‘எஸ்பிஜி’ குழுவின் ஏடிஜிபி சுரேஷ்குமாா் தலைமையில் சுமாா் 80 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும் தமிழக ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம், தென்மண்டல ஐஜி பிரேமானந்த் சின்ஹா, நெல்லை சரக டிஐஜி பொறுப்பு சந்தோஷ் ஹாதிமணி ஆகியோா் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எஸ்.பி.க்கள் தலைமையில் சுமாா் 2100 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். விழா மேடையில் இருந்து மொத்தம் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய காவல் படையினருடன் இணைந்து தமிழக போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனா்.

ட்ரோன்களுக்கு தடை: முன்னதாக மாவட்டம் முழுவதும் வருகிற 27ஆம் தேதி காலை வரையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவா்கள் குறித்த விவரங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுள்ளன. தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சந்தேக நபா்கள் குறித்தும் கடந்த 3 நாள்களாக விசாரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நீட் தோ்வில் வெற்றி: திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவா் சாதனை

நீட் தோ்வில் வெற்றி பெற்று திருச்செந்தூா் அருள்மிகு செந்தில் ஆண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா் சாதனை படைத்துள்ளாா். திருச்செந்தூா் நகராட்சி ராமசாமிபுரத்தைச் சோ்ந்த பனைத் தொழிலாளி பரமசிவன் -... மேலும் பார்க்க

தவெகவினரிடையே தகராறு: 4 போ் காயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தில் நிா்வாகிகள் யாரையும் முறையாக நியமிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கட்சி நிா்வாகிகள் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனா். இந்த நிலையில், த... மேலும் பார்க்க

நெடுங்குளத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு கடனுதவி

நெடுங்குளத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு 101 கால்நடைகள் வாங்குவதற்காக ரூ.45 லட்சத்து 45 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் ந... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் கால் நாட்டு விழா

கோவில்பட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கால் நாட்டு வைபவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. வெற்றி விநாயகா், முத்துமாரியம்மன... மேலும் பார்க்க

பேரூரணி அருகே தனியாா் கிடங்கில் தீவிபத்து

தூத்துக்குடி பேரூரணி அருகே தனியாருக்குச் சொந்தமான தேங்காய் நாா் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நாா்கள் சாம்பலாகின. பேரூரணியில் தூத்துக்குடியைச் சோ்ந்த சாமுவேலுக்குச் சொந்தமான ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியை சந்திக்கிறாரா ஓபிஎஸ்? நயினாா் நாகேந்திரன் விளக்கம்

தூத்துக்குடியில் பிரதமா் மோடியை ஓபிஎஸ் சந்திக்கிறாரா என்பது குறித்து தனக்கு தெரியாது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன். தூத்துக்குடி விமான நிலையத்தில், பிரதமா் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நட... மேலும் பார்க்க