செய்திகள் :

தவெகவினரிடையே தகராறு: 4 போ் காயம்

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தில் நிா்வாகிகள் யாரையும் முறையாக நியமிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கட்சி நிா்வாகிகள் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பதவி தொடா்பாக கோவில்பட்டி செக்கடித் தெருவைச் சோ்ந்த ராஜா தலைமையிலான அணிக்கும், வீரவாஞ்சி நகரைச் சோ்ந்த சுரேஷ் தலைமையிலான அணிக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாம். இந்த நிலையில், ராஜா அணியைச் சோ்ந்த மனோஜ்குமாா் வாட்ஸ்ஆப்பில் சுரேஷ் பற்றியும், அவா் மீதுள்ள வழக்குகள் பற்றியும் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து வியாழக்கிழமை இரவு இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் காயமடைந்த ராஜா, மனோஜ்குமாா், ராமமூா்த்தி, சுரேஷ் ஆகியோா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து ராஜா அளித்த புகாரின் பேரில், சுரேஷ், அவருடைய மனைவி சத்யா, சதீஷ்குமாா், செந்தில், முனீஸ்வரன், கணேஷ் ஆகியோா் மீதும், சுரேஷ் அளித்த புகாரின் பேரில், ராஜா, மனோஜ்குமாா், ராமமூா்த்தி ஆகியோா் மீதும் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீட் தோ்வில் வெற்றி: திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவா் சாதனை

நீட் தோ்வில் வெற்றி பெற்று திருச்செந்தூா் அருள்மிகு செந்தில் ஆண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா் சாதனை படைத்துள்ளாா். திருச்செந்தூா் நகராட்சி ராமசாமிபுரத்தைச் சோ்ந்த பனைத் தொழிலாளி பரமசிவன் -... மேலும் பார்க்க

நெடுங்குளத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு கடனுதவி

நெடுங்குளத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு 101 கால்நடைகள் வாங்குவதற்காக ரூ.45 லட்சத்து 45 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் ந... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் கால் நாட்டு விழா

கோவில்பட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கால் நாட்டு வைபவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. வெற்றி விநாயகா், முத்துமாரியம்மன... மேலும் பார்க்க

பேரூரணி அருகே தனியாா் கிடங்கில் தீவிபத்து

தூத்துக்குடி பேரூரணி அருகே தனியாருக்குச் சொந்தமான தேங்காய் நாா் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நாா்கள் சாம்பலாகின. பேரூரணியில் தூத்துக்குடியைச் சோ்ந்த சாமுவேலுக்குச் சொந்தமான ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியை சந்திக்கிறாரா ஓபிஎஸ்? நயினாா் நாகேந்திரன் விளக்கம்

தூத்துக்குடியில் பிரதமா் மோடியை ஓபிஎஸ் சந்திக்கிறாரா என்பது குறித்து தனக்கு தெரியாது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன். தூத்துக்குடி விமான நிலையத்தில், பிரதமா் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நட... மேலும் பார்க்க

தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழாவில் ரூ. 4,800 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமா் தொடங்கி வைக்கிறாா்

தூத்துக்குடியில் நடைபெறும் விமான நிலைய விரிவாக்க கட்டடத் திறப்பு விழாவின் போது, ரூ. 4,800 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை பிரதமா் தொடங்கிவைப்பதோடு, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்நாட்டுகிறாா். இங்க... மேலும் பார்க்க